அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

இந்திய சுந்தந்திரமும் அஹ்மதிய்யா ஜமாத்தும் - 1


சுதந்திரம் என்பது மனிதனின் பிறப்புரிமையாகும். இஸ்லாம் மனித இயல்புக்கேற்ற மார்க்கமாகும் எனவே இஸ்லாம் மனிதனின் இந்த உரிமையையும் பாதுகாத்துள்ளது. இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் சுதந்திரமும் ஒன்றாகும் மார்க்க உரிமைக்காகவும், மனசாட்சி உரிமைக்காகவும், நாட்டுரிமைக்காகவும் குரல் கொடுத்த ஒரே மார்க்கம் இஸ்லாம்தான். இஸ்லாத்தின் எதிரிகளோ தமது கொள்கைகளையும், கோட்பாடுகளையும் மற்றவர்கள் மீது திணிக்க முயன்றார்கள். அந்த எதிரிகள் பலவந்ததினாலும், பெரும்பான்மை என்ற ஆனவத்தினாலும் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அழித்தொழிக்கும் முயற்சியில் எந்தக் குறையையும் விட்டுவைக்கவில்லை.

மௌலானாவின் கலப்பட மார்க்கம் - பிரிட்டீஸ் ஆட்சியும் அஹ்மதியா இயக்கமும்


அஹ்மதியா இயக்கத்திற்கெதிராக பொய்யானதும், மக்களை ஏமாற்றுவதற்கும் அடிக்கடி எதிரிகளால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் அஹ்மதியா இயக்கம் ஆங்கிலேயர்களால் தோற்றுவிக்கப்பட்டது என்பதும் ஆகும். 

"இஸ்மி" இதழின் "மௌலானா" இதே குற்றச்சாட்டை இவ்வாறு வெளிப்படுத்துகின்றார்:-

"ஆங்கிலேயர் தேசத்தைக் கைப்பற்றிய போது இந்துக்கள் ஆங்கிலேயருக்கு உடனே அடங்கிப் போய்விட்டனர். முஸ்லிம்களோ பணிந்து அடிமை வாழ்வு வாழ விரும்பவில்லை. ஆங்கிலேயரை எதிர்த்து போராடுவதற்கு என்ற

வஹியும் இல்ஹாமும் நின்று விடவில்லை இறைவன் என்றும் பேசக்கூடியவன் அந் நஜாத்திற்க்கு ஒரு விளக்கம்


என்ன தான் சில ஆலிம்சாக்கள் தங்களை புரட்சிக்காரர்களாக, புதிய கருத்துக்களை கூறுபவர்களாக, மூட முல்லாக்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக்காட்டிக் கொண்டாலும் கூட சில விசயங்களில் இவர்களும் அறிவு சூனியங்கலாகவே இருப்பதை உணரமுடிகிறது. இது இவர்களும் நேர்வழியில் இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.

அந்- நஜாத் ஏட்டின் ஆகஸ்ட் இதழில் ஐயம் தெளிவு பகுதியில், நமது இறுதி நபிக்குப் பின் அல்லாஹ் கலிபாக்களிடமோ வலிமார்களிடமோ அசரீரியாக பேசியுள்ளானா? என்ற கேள்விக்கு ஆசிரியர் தந்துள்ள பதில் இதற்க்கு ஓர் அழகான எடுத்துக்காட்டாகும். அவர் கூறியுள்ள பதில் இதுதான்.


யூசுப் நபி பற்றிய தவறான விளக்கம்


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 236 இல் யூஸுபுக்கு தந்திரத்தைக் கொடுத்தோம் காரியம் சாதிக்க தந்திரம் செய்யலாமா? என்னும் தலைப்பில் பி.ஜே 9 வது பதிப்பில் இவ்வாறு எழுதுகிறார்: 

யூசுப் நபியவர்கள் தமது சகோதரரை தம்முடனே வைத்துக் கொள்வதற்காக அவர் மீது திருட்டுப் பட்டம் சுமத்தி. அதையே காரணம் காட்டி, பிடித்து வைத்துக் கொண்டதாக இவ்வசனம் (12:76) கூறுகிறது. 

இதை யூசுப் நபி, தன்னிச்சையாகச் செய்தார் என்று கருத முடியாது. ஏனெனில், இந்தத் தந்திரத்தை நாமே அவருக்குக் கற்றுக் கொடுத்தோம் என்று இதே வசனத்தின் தொடர்ச்சியாக அல்லாஹ் கூறுகிறான். 


ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கு அவர்கள் அளித்த பதிலும்.


கேள்வி: கலிமா கூறுபவரையும், கிப்லாவை முன்னோக்கித் தொழுபவரையும் காபிர் என்று கூறுவது சரியானதல்ல” எனத் தாங்கள் ஆயிரக்கணக்கான இடங்களில் எழுதியுள்ளீர்கள். இதிலிருந்து நம்பிக்கையாளர்களில் எவர்கள் தங்களை நிராகரித்தால் “காபிர்” ஆகி விட்டார்களோ அவர்களைத் தவிர தங்களை ஏற்றுக் கொள்ளாததால் மட்டும் எவரும் காபிர் ஆகமாட்டார் என்று தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அப்துல் ஹகீம் கான் என்பவருக்கு “எனது தூதுச் செய்தி எட்டியபின்னர் என் மீது நம்பிக்கை கொள்ளாத ஒவ்வொருவரும் முஸ்லிம் ஆகமாட்டார்” என எழுதியுள்ளீர்கள். “திரியாகுல் குலூப்” என்ற புத்தகத்தில் என்னை ஏற்றுக் கொள்ளாததால் எவரும் காபிர் ஆக மாட்டார்” என்று எழுதியுள்ளீர்கள். இப்போது நீங்கள் எழுதியதற்கும் இதற்கு முன்னர் நீங்கள் எழுதியதற்கும் இடையில் முரண்பாடு உள்ளதே? விளக்கம் தருக.


மரியத்தின் மகன் ஈசா (அலை) வானத்திலிருந்து வரப்போவதில்லை


இமாம் மஹ்தி (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:

மிகவும் விளக்கமாக, ஆணித்தரமாக மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். எவரும் வானத்திலிருந்து இறங்கி இவ்வுலகிற்கு வரப்போவதில்லை. எதிர்பார்ப்பவர்களின் சந்ததியினரும் மரணித்து விடுவார்கள் ஆனால் அவர்களில் எவரும் மரியமின் மகன் ஈசா (அலை) வானத்திலிருந்து இறங்கி வருவதை காணப்போவதில்லை. அதன் பிறகு அல்லாஹ் அவர்களை நிம்மதி இழக்கச் செய்து விடுவான். அந்த சமயத்தில் உலகத்திலிருந்து சிலுவையின் ஆதிக்கம் படிப்படியாக நழுவுவதை காணலாம். அதன் பிறகு ஒரு புதிய சகாப்த்தம், புதிய நிலை உலகில் பெறும் மாற்றம் ஏற்பட்டு விடும். அதன் பிறகும் மரியமின் மகன் ஈசா (அலை) வானத்திலிருந்து வரப்போவதில்லை.

இஸ்மி மௌலானாவின் கலப்பட மார்க்கம்


ஜிஹாதும் அஹ்மதிய்யா ஜமாத்தும்

இஸ்மி ஏட்டின் அக்டோபர் இதழில் அதன் ஆசிரியர் அஹ்மதியா இயக்கத்திற்கும், அதன் தூய ஸ்தாபகர் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்கும் எதிரான தமது காழ்ப்புணர்ச்சியை வெளியிட்டு பின்வருமாறு எழுதுகிறார்.

'ஆங்கிலேயர் விருப்பப்படி மிர்ஸா குலாம் இரண்டு காரியங்களை செய்தார். ஒன்று புனிதப் போர் என்ற பெயரில் மிக்க அலங்காரமான வார்த்தைக் கோவைகளை அமைத்து முஸ்லிம்களை தன்பக்கம் ஈர்த்தார். இரண்டாவது ஆங்கிலேய அரசுக்கு எதிராக முஸ்லிம்கள் ஆயுதம் எடுக்காமல்

தவ்ஹீதின் தத்துவம்


ஹழ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்:

புனித கலிமாவில் பொதிந்துள்ள கருத்தை கவனியுங்கள் ! “லாயிலாக இல்லல்லாஹ்” என்ற கலிமாவை ஒரு மனிதன் நாவினால் மொழிந்து அதன் பொருளான, வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. என்பதை தனது உள்ளத்தில் உறுதிபடுத்துகிறான். “இலாஹ்” எனும் அரபி மொழிச் சொல் வணக்கத்திற்குரியவன், நேசத்திற்குரியவன், விருப்பத்திற்குரியவன் என்றெல்லாம் பொருள்படும்.

இந்தக் கலிமா முஸ்லிம்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டுள்ள திருக்குர் ஆனின் சுருக்கமாகும்.. இதன் பொருள் என்னவெனில், இறைவனை

இறுதி நபிக் கொள்கையை கைவிட்ட பி.ஜே


ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நபி, மார்க்கம் முழுமையடைந்து விட்டது இனி எவரும் நபியாக வரமாட்டார், வர வேண்டிய அவசியமில்லை என இதுவரை கூறிவந்த பொய்யன் ஜைனுலாப்தீன் இப்போது நபி(ஸல்) அவர்களின் வாழ்நாளில் நபி வர வாய்ப்பிருந்தது என்ற புதிய கருத்தைக் கூறியிருக்கிறார். அதாவது திருக்குரான் இறுதியாக அருளப்பட்ட நிலையில் இன்னொரு நபி வர வாய்ப்புள்ளது என அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஒற்றுமை இதழில் திருக்குரானின் மூன்றாவது அதிகாரம் என்பத்தி இரண்டாவது வசனம் மற்றும் முப்பத்தி மூன்றாவது அதிகாரம் எட்டாவது வசனம் ஆகிய வசனங்களுக்கு விளக்கம் கூறும் பொது அவர் கூறி இருப்பதை பாருங்கள்:

சுவர்கதிற்குரிய 73 வது பிரிவு அஹ்மதிய்யா ஜமாஅத்தே - முல்லாக்களின் ஏகோபித்த கருத்து.


மௌலவி ஸபர் அலி என்பவர் கீழ்வருமாறு ஒரு அறிக்கையை விடுத்திருந்தார்; அவர் கூறுகிறார்:

"இந்த செயற்குழு (அதாவது 1974 செப்டம்பர் 6 ஆம் நாள் அன்று பாகிஸ்தான் அரசு ஒரு குழுவை அமைத்து அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தை காஃபிராக்கியது அந்த செயற்குழு) கடந்த 1400 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக "இஜ்மாயே உம்மதிற்கான" (சமுதாயத்தில் ஏகோபித்த கருத்தை அறிகின்ற) வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று காதியானிகளுக்கு எதிராக 72 பிரிவுகள் (இங்கு கவனிக்க வேண்டியது) ஒன்று சேர்ந்திருக்கின்றன. ஷியா, சுண்ணி, அஹ்லே ஹதீஸ், வஹ்ஹாபி, தேவ்பந்தி, பரேல்வி, ஆகிய

உண்மையான நஜாத் எது?


நஜாத் ஆசிரியர் தாமும் குழம்பி பிறரையும் குழப்புகிறார் 73 பிரிவு பற்றிய நபி மொழியில் "மன்ஹும்" என்றிருப்பதாக அவர் கூறியிருந்ததை தவறென சுட்டிக் காட்டி "மன்ஹிய" என்றே காணப்படுவதை எடுத்துக் காட்டியிருந்தோம். அதற்கு அவர் தமது இதழில் நாம் நமது இலக்கண அறிவைப் பயன்படுத்தி மக்களை வழிகெடுப்பதாக கூறி நம்மை சாடியிருக்கிறார். 

உள்ளதை, உள்ளபடி கூறுவது வழி கெடுப்பதா? அல்லது இல்லாததை இட்டுக் கட்டிக் கூறுவது வழி கெடுப்பதா? ஒன்றுக்கு பொருள் கூறுவதில் தவறு நேரலாம், கருத்து வேறுபாடு வரலாம். ஆனால் மூலச் சொல்லையே மாற்றி எழுதுவது அக்கிரமச் செய்யலல்லவா? இது மக்களின் அறியாமையைப்

73 பிரிவுகளில் நேர்வழிபெற்ற பிரிவு எது?


நபி (ஸல்) அவர்கள் இறுதிகாலத்தில் தமது சமுதாயம் எவ்வாறு இருக்கும் என்பதைக் கீழ்வருமாறு முன்னறிவித்துள்ளார்கள்:-

"ஒரு ஜோடி காலனிகளுள் ஒன்றோடொன்று ஒத்திருப்பது போன்று இஸ்ரவேல் சமுதாயத்திற்கு நிகழ்ந்தது அனைத்தும் எனது சமுதாயத்திற்கும் நிகழும். இஸ்ரவேலர்கள் எழுபத்துஇரண்டு பிரிவுகளாகப் பிரிந்தனர். எனது சமுதாயமோ எழுபத்துமூன்று பிரிவுகளாகப் பிரியும் (அவற்றுள்) ஒரு பிரிவாரைதவிர ஏனைய பிரிவினர் அனைவரும் 'நரகை அடைவர்' இறை தூதரே! அந்த பிரிவு எது? என்று வினவப்பட்டபோது நானும் எனது சஹாபாக்களும் எவ்வாறிருப்பார்களோ அந்தப் பிரிவு என நபிபெருமானாரவர்கள் பதிலளித்தார்கள்"


ஆதம் நபி சொர்க்கத்தில் வாழ்ந்தார்களா?


அந்-நஜாத் ஆசிரியர் கூறுகிறார் ஆதம் (அலை) அவர்கள் சொர்கத்திலிருந்துதான் இவ்வுலகிற்கு வந்தார்கள் என்று குரான் (2:35, 7:20,22, 20:121)ஆகிய ஐந்து இடங்களிலும் ஆதாரப்பூர்வமான பல ஹதீதுகளிலும் தெளிவாகக் குறிப்ப்பிடப்பட்டிருக்கிறது".

இதற்க்கு விளக்கம் எழுதுவதற்கு முன் ஆசிரியர் எடுத்துக்காட்டிய ஐந்து திருக்குர்ஆன் வசனங்களை ஆராய்ந்து பார்ப்போம்.

இந்த ஐந்து வசனங்கள், ஹஸ்ரத் ஆதம் (அலை) அவர்களையும் அவரது மனைவியையும் ஒரு தோட்டத்தில் வாழச்செய்து, அங்கு ஒரு குறிப்பிட்ட மரத்தை அணுகக் கூடாது என்றும், அதைத்தவிர அவர்கள் இருவரும்

ஆதம் நபி முதல் மனிதரா?


ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்களே உலகில் தோன்றிய முதல் மனிதர் என முஸ்லிம்களில் பெரும்பாலாரும் கிறிஸ்தவர்களும் நம்புகின்றனர். ஆதம் நபி முதல் மனிதெரென்று பைபிளில் கூறப்பட்டிருக்கிறதோ இல்லையோ திருக்குரானிலோ நபிமொழிகளிலோ அவ்வாறு கூறப்படவே இல்லை. எனவே ஆதம் நபி முதல் மனிதர் என்ற தவறான நம்பிக்கை, ஈஸா(அலை) அவர்களைப் பற்றிய தவறான நம்பிக்கைகள் போன்று கிறிஸ்தவர்களிடம் இருந்து இந்த முஸ்லிம்களுக்குத் தொற்றியிருக்க வேண்டும்.

திருக்குரானில் 2:31 ஆம் வசனத்தில் ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்களைக் 'கலீபா' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. 'கலீபா' என்ற சொல், பிரதிநிதி, பின்தொடருபவர், தலைவர், ஆட்சியாளர் என்று பொருள்படும். மக்கள்

இறுதிநபி கொள்கையை கைவிட்டவர்கள்


கடந்த 1997 டிசம்பர் மாதத்தில் சென்னையில் பிரிவுப் பெயர்கள் கூடுமா?கூடாத? என்ற தலைப்பில் ஒரு விவாதக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தற்போது தங்களுக்குள் பிளவுபட்டு ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளை தங்களுக்குள் மாறி மாறி அள்ளி வீசிக்கொண்டு சத்திய இஸ்லாத்தை மக்கள் மத்தியில் எத்திவைக்கப்பாடுபடுவதாக வரிந்துகட்டிக்கொண்டு பேசியும், எழுதியும் வரக்கூடிய இருபெரும் தௌஹீது(?) அறிஞர்களும், பல அறிஞர்களும் (ஆலிம்களும்) தௌஹீது(?) வாதிகளும் கலந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த விவாதத்தில் தாங்கள்தான் தௌஹீதை உண்மையிலேயே குர்ஆன்,ஹதீஸ் அடிப்படையில் தெளிவுபடுத்தி வருகிறோம் என்று பிரகடனப்படுத்தும், பல குட்டிப்பிரிவுகளில் ஒரு பிரிவினரை வழிநடத்தும் முன்னால் அந்நஜாத், அல்-ஜன்னத்

அல் ஜன்னத்தின் இறுதி நபித்துவம்


அல் ஜன்னத் இதழில் ஒரு கேள்வியும் அதற்க்கான பதிலும் இடம் பெற்றுள்ளது. அந்தக் கேள்வி திருத்தப்பட வேண்டியதும் அதற்க்கான பதில் மறுக்கப்படவேண்டியதுமாகும்

"3:81, 33::7 வசனங்கள் நபிகள் நாயகத்துக்குப் பின் வேறு நபிமார்கள் வரமுடியும் எனக் கூறுவதாக என் நண்பர் வாதிடுகிறார் இது சரியா? என்பதுதான் கேள்வி.

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் திருக்குர்ஆனுக்கும், ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் மாற்றமான வேறு நபிமார்கள் வரமுடியும் என எந்த முஸ்லிமும் நம்பவில்லை.

ஆயினும் திருக்குர்ஆ னுக்கும், ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சுன்னத்திற்கும் உட்பட்டவராக இந்த முஸ்லிம் சமுதாயத்தில் ஈசா நபி தோன்றுவார்கள்  என எல்லா முஸ்லிம்களும் நம்புகின்றனர். அது குறித்து முன்னறிவிப்புகள் திருக்குரானிலும். ஹதீஸிலும் நிறைய உள்ளன. இதனை எந்த முஸ்லிமும் மறுக்க முடியாது.

ஆங்கிலேயர்களின் கைக்கூலி யார்?


அஹ்மதியா இயக்கம் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது என்ற மிகப் பழமையான ஊசிப்போன குற்றச்சாட்டு இவர்களின் தாஜ்ஜாலியத்திற்கான (பொய்யர்கள்) சிறந்த உதாரணமாகும். அஹ்மதியா இயக்கத்தின் உலகளாவிய வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் கண்டு பொறாமையும், காழ்புணர்ச்சியும் கொண்ட அல் அமீன் ஏட்டின் ஆசிரியர் இவ்வாறு கூறுகிறார்.

"காதியானி இயக்கம் என்ற ஒன்று பஞ்சாப் மாநிலத்தில் ஒரு மூலையில் ஆங்கிலேயர்களின் ஒத்துழைப்புடன் உருவானது". 


இப்னு மர்யம் பற்றி அபூ அப்தில்லாவின் தவறான கருத்து


அபூ அப்தில்லாஹ் எழுதுகிறார்.

திருக்குரானில் குறிப்பிடப்படும் எந்த நபியும் அவர் இன்னாரின் மகன் என்று குன்யத்துப் பெயரால் அல்லாஹ் அழைக்கவில்லை. ஈஸா (அலை) அவர்களை மட்டும் இப்னு மர்யம் என்று குன்யத்துப் பெயரால் இறைவன் அழைப்பதன் மர்மம் என்ன? சுமார் 2000 வருடங்களுக்கு முன் அல்லாஹ் அளவில் உயர்த்தப்பட்ட அதே ஈசப்னு மர்யம் மீண்டும் உலகில் இறங்குவார் என்பதை மக்களுக்கு சந்தேகமற அறிவிக்கவே தனது திருமறையில் அவர்களைப் பற்றி குறிப்பிடும் இடங்களில் எல்லாம் ஈசப்னு மர்யம் என்றே குறிப்பிடுகின்றான். 


ஷேர் அலி திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பை டவுன்லோட் செய்யுங்கள்.


ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் தோழர்களில் ஒருவரான ஹஸ்ரத் ஷேக் அப்துல் அஸீஸ் அவர்கள் கீழ்வரும் நிகழ்ச்சி ஒன்றை கூறினார்கள்.

ஹஸ்ரத் இமாம் மஹ்தி(அலை) அவர்களின் தோழரும் ஹாபிஸுமான முதியவர் ஒருவர் இருந்தார். இவர் கண்பார்வையற்றவர். மேலும் வயதானதன் காரணமாக அவருக்கு கேட்கும் சக்தியும் படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது. அவர் ஒருமுறை என்னிடம் இவ்வாறு கூறினார்.

ஒருமுறை நான் ஹக்கீம் குத்புதீன் அவர்களிடம் சென்று எனது காது மந்தமாகி வருவதைத் தெரிவித்தேன். அவர் எனது காதுகள் காய்ந்திருப்பதைக் கண்டு தினமும் பால் அருந்தி வரவேண்டும் என ஆலோசனைக் கூறினார்.