அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

'லா நபிய்ய பஃதீ' - ஓர் ஆய்வு


நான் சொன்னதாக ஓர் அறிவிப்பு (உங்களுக்கு)க் கிடைத்தால் அதைக்குரானுடன் ஒத்துப் பாருங்கள். குரானுக்கு இணக்கமாக அது இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையெனில் (நான் சொன்னதாக இருக்காது என்று) அதைத் தள்ளி விடுங்கள்' (1.பைஹகீ, 2.தாருல் குத்னீ) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நினைவில் வைத்துக் கொண்டு, 'லா நபிய்ய பஃதீ' என்ற ஹதீஸைக் குர் ஆனுடன் ஒத்துப் பார்க்க வேண்டும்.

அல்லாஹ் திருக்குரானில் பல வசனங்களில் நபிமார்கள் வரலாம் என்று கூறியிருக்கும் போது, அதற்க்கு மாற்றமாக இந்த ஹதீசுக்கு பொருள் கொடுப்பது தவறு.


ஆதம் நபி மட்டுமல்ல மனித இனமும் மண்ணினால் படைக்கப்பட்டதே


ஆதம் நபி மட்டுமல்ல மனித இனமும் மண்ணினால் படைக்கப்பட்டதே
அபூ அப்தில்லாஹ் எழுதுகிறார்:

36:77; 76:2; 80:19; ஆகிய இறைவசனங்களில் மனிதனை இந்திரியத்திலிருந்து படைத்ததாக அல்லாஹ் கூறுகின்றான். அப்படியாயின், ஆதம் (அலை) அவர்களை மண்ணால் படைத்ததாக எப்படிச் சொல்ல முடியும்? இவ்வசனங்களிலெல்லாம் ஆதத்தை தவிர மற்றவர்களை என்றல்லவா கூறி இருக்கவேண்டும். என்று நாஸ்திகர் ஒருவர் கேட்பதற்கும் இந்த காதியானிகள் 3:144 வசனம் பற்றி கேட்பதற்கும் வேறுபாடு உள்ளதாக நமக்குப் புலப்படவில்லை.


அஹ்மதியா கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் ஆலிம்கள்


திருக்குர்ஆன், நபிமொழி ஆகியவற்றின் அடிப்படையில் அமையப்பற்ற அஹ்மதியா ஜமாத்தின் கொள்கைகளை சில அரைகுறை ஆலிம்சாக்கள் தான் மறுக்கின்றார்களேயொழிய கற்றரிந்த மேதைகளான ஆலிம்கள் அவற்றை ஆமோதிக்கவே செய்கின்றனர்.

சவுதி அரேபியாவைச் சார்ந்த "ராபிதத்துள் ஆலமில் இஸ்லாம்" என்ற அமைப்பு வெளியிட்டுள்ள திருக்குர்ஆன் ஆங்கில மொழியாக்கம் மற்றும் விரிவுரையில் அல்லாமா முஹம்மத் அஸத் அவர்கள ஈசா நபி (அலை) அவர்கள் உடலுடன் உயர்த்தப்பட்டார்கள், என்ற கதையை மறுத்து இவ்வாறு கூறியுள்ளார்கள்.


அதிபர் பூட்டோவின் மரணம் பற்றி இமாம் மஹ்தி(அலை) அவர்களின் முன்னறிவிப்பு.


இமாம் மஹ்தி(அலை) அவர்கள் தத்கிரா பக்கம் 113-114

with regards to the death of a certain person, Allah revealed to me through the value of the letters of the alphabet that the date was comprised in the words of the revelation (Arabic) He is a dog and he will die according to the value of the letters in the word dog which amounts to fifty two this means that his age will not exceed fifty two and that he will die within the course of his fifty second year (Izala Auham pp186-187)

இந்த நூல் இலண்டனின் 1976 ஆம் ஆண்டு அச்சிட்டு வெளியிடப்பட்டது. இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். ஐ.நா சபையில் தலைவராகவும் தலைமை நீதிபதியாகவும் இருந்த ஸபருல்லாஹ் கான் சாஹிப் ஆவார். இந்த இல்ஹாம் 1891ம் ஆண்டு ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத்(அலை) அவர்களுக்கு வந்தது.

அகக்கண்ணும் புறக்கண்ணும்


பக்கம் 58 இல் அபூ அப்தில்லாஹ், மிஹ்ராஜில் நபி (ஸல்) அவர்கள், ஈஸா (அலை) அவர்களைக் கண்களால் கண்டது மிர்ஸா குலாமால் ஊர்ஜிதம் செய்யப்படுகிறது. கண்களால் பார்ப்பதென்றால் தூல உடலுடன் தான் நபி (ஸல்) அவர்கள் மிஹ்ராஜுக்குச் சென்றிருக்கவேண்டும். கனவுக் காட்சியைக் கண்களால் கண்டதாக எந்த அறிவீனனும் சொல்லமாட்டான் என்று எழுதியுள்ளார். 

நம் பதில்: 

1) யூஸுப் நபி அவர்கள், பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் நான் கண்டேன். அவை எனக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன். என்றும் சிறைக் கைதிகளும் மதுரசம் பிழியக் கண்டேன் என்றும், தலையில்

'கப்ல மௌதிஹீ' - ஒரு விளக்கம்


(வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும் அதற்க்கு அவர்கள் அளித்த பதிலும்)

கேள்வி : கீழ்க்காணும் திருக்குர்ஆன் வசனம் மஸீஹ் (அலை) அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்பதற்கு சான்று பகர்கிறது. அதாவது "வ இன் மின் அஹ்லில் கித்தாபி இல்லா ல யுமினன்னா பிஹீ கப்ல மௌதிஹீ (4:160) 'மஸீஹின் மரணத்திற்கு முன் எல்லாரும் அவரிடத்து நம்பிக்கை கொள்வார்கள்'.

எனவே இந்த வசனத்தில் பொருளிலிருந்து வேதத்தையுடையவர்கள் எல்லோரும் நம்பிக்கை கொள்ளும் வரையில் மஸீஹ் உயிரோடு இருக்க

இறைவன் புறமிருந்து வந்த நபி "ஜமாத்துல் உலமா ஏட்டிற்கு மறுப்பு


ஒரு பொய் அது பல்லாயிரம் தடவை கூறப்பட்டுகொண்டிருந்தாலும் அது மெய்யாகாது என்பது உண்மையாயிருந்தும் கடந்த நூறாண்டுகாலமாக அஹ்மதிய்யா ஜமாத்திற்க்கும், அதன் தூய ஸ்தாபகருக்கும் எதிராக வானத்தின் கீழ் மிகப்பெரும் குழப்பவாதிகள் என்றும், கேட்ட ஜந்துக்கள் என்றும், எம்பெருமானார்(ஸல்) அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட இன்றைய ஆலிம்சாக்கள் தொடர்ந்து பொய் கூறிக்கொண்டு அல்லாஹ்வின்- "லஹ்னதுல்லாஹி அலல் காதிபீன்" என்ற திருவசனத்திற்க்கினங்க இறைவனது சாபத்திற்கு ஆளாகி கொண்டிருக்கிறார்கள்.இதற்க்கு உதாரணமாக ஆகஸ்ட் மாத ஜமாத்துல் உலமா ஏட்டில் அதன் ஆசிரியர், பசுங்கதிர் மாத ஏட்டில் எம். கே. இ . மௌலான என்பவர் "ஆங்கிலேயர் தோற்றுவித்த நபி" என்னும் தலைப்பில் எழுதிய ஒரு புழுகு மூட்டையை

ராட்சச பறவை என்பது பி.ஜே யின் கற்பனைக் கதையாகும்.


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 416 இல் ராட்சதப் பறவை என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதியுள்ளார்;

இவ்வசனத்தில் (22:31) இணை கரிபிப்பவனுக்கு உதாரணம் கூறம் போது, பறவைகளால் தூக்கிச் செல்லப்பட்டு வீசி எறியப்பட்டவனைப் போல் என்று கூறப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) காலம் முதல் இன்று வரை எந்தப் பறவையும் மனிதனைத் தூக்கிக் கொண்டு சென்று வேறு இடத்தில் போடுமளவுக்குப் பெரிதாக இருக்கவில்லை.

மனிதனை விட பன்மடங்கு பெரிதாகவும் வலிமைமிக்கதாகவும் ஒரு பறவை இருந்தால்தான் இது சாத்தியமாகும்.

ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களை இறைவன் உடலோடு உயர்த்தவில்லை என்று கூறுகிறான்.


அபூ அப்தில்லாஹ் தன் நூலில் திருக்குர்ஆனில் 4:159 வசனத்தைக் குறிப்பிட்டு பல் ரபஅ ஹுல்லாஹு இலைஹி என்பதற்கு அபூ அப்தில்லாஹ் கூறும் விளக்கத்தைப் பாருங்கள்.

1. ஈஸா நபி (அலை) அவர்களின் உடலைத்தான் உயர்த்தியுள்ளான்.

2. அதனால் தான் அல்லாஹ் வல்லமை மிக்கவனும் ஞானம் மிக்கவனுமாக இருக்கின்றான். (4:158) என்று திருக்குர்ஆனில் கூறுகிறான்.

3. உடல் உயர்த்தப்படவில்லை, பதவி உயர்வையே குறிக்கும் என்பது அல்லாஹ்வின் வல்லமையைக் குறைத்து மதிப்பதாகும்.


கமர் என்ற சொல்லை அல்லாஹ் முதல் பிறைக்கு பயன்படுத்தியுள்ளானா? - பி.ஜே க்கு மறுப்பு


பி.ஜே யின் கேள்வி:-

கமர் என்ற சொல் மூன்று நாட்களுக்கு பிறகு உள்ள பிறைக்குத்தான் சொல்லப்படும். இது அன்று முதல் இன்று வரை அனைத்து அரபுகளும் ஒன்று பட்டுக் கூறும் கருத்தாகும். இதற்க்கு மாற்றமாக அரபு மொழி அறிஞர் யாரும் சொன்னதில்லை. மொழி அறியாதவன்தான் இதற்க்கு மாற்றமாக சொல்வான் என்று மிர்ஸா குலாம் நூருல் ஹக் இல் எழுதியுள்ளார். ஆனால் கமர் என்ற வார்த்தையை அல்லாஹ் முதல் பிறைக்கும் பயன்படுத்தியுள்ளானே என்று ஏராளமான சான்றுகளுடன் கேள்வி கேட்டோம். அல்லாஹ்வையே விமர்சனம் செய்பவனும் இல்லாததை இட்டுக் கட்டும் மடையனும் எப்படி நபியாக இருக்க முடியும் என்று கேட்ட போதும் அவர்களிடம் பதில் இல்லை.


மலக்குகளைப் பற்றிய தவறான விளக்கம்.

ஈமான் கொள்ள வேண்டியவற்றுள் ஓர் அம்சம் மலக்குகள் மீது ஈமான் கொள்வதாகும். மலக்குகளைப்பற்றி பி.ஜே தன் திருக்குர்ஆன் விளக்கம் எனும் நூலில் பில்லி சூனியம் என்ற தலைப்பில் இவ்வாறு எழுதுகிறார்:

மனிதனின் தகுதியைப்பற்றி முன்பே விமர்சனம் செய்து அந்த விமர்சனம் தவறு என்று இறைவன் விளக்கிய பிறகு தவறு என்று ஒப்புக் கொண்டவர்கள் வானவர்கள்.

இத்தகைய இயல்பு படைத்த வானவர்கள் இன்னொரு முறை எப்படி இறைவனிடம் ஆட்சேபனை செய்திருப்பார்கள்? மலக்குகள் ஆரம்பத்தில் ஆட்சேபனை செய்தபோது அவர்களுடன் செய்த்தான் இருந்தான்.

மௌதூதி சாஹிபின் அபத்தமான திருக்குர்ஆன் விளக்கவுரை


திருக்குரானில் 69வது அத்தியாயம் 43 முதல் 47 வரையுள்ள வசனங்களுக்கு மௌதூதி சாஹிப் அவர்கள் செய்துள்ள தர்ஜுமாவும் அதற்க்கு அவர் வழங்கியுள்ள வியாக்கியானத்தையும் கீழே தருகிறோம். இதை இஸ்லாமிக் பௌண்டேஷன் டிரஸ்ட்" வெளியிட்டுள்ள திருக்குர்ஆன் மூலமும்-தமிழாக்கமும் விளக்கவுரையில் இரண்டாம் பாகத்தில் பக்கம் 576-ல் காணலாம்

"மேலும் இவர் (இந்த நபி) சுயமாக இட்டுக்கட்டி ஏதேனும் ஒரு விஷயத்தை நம் பெயரில் சேர்த்து சொல்லிருந்தால், நாம் அவரது வலக்கரத்தைப் பிடித்திருப்போம். பிறகு அவருடைய பிடரி நரம்பை

இமாம் மஹ்தியின் வருகையும் - அல் ஜன்னத் ஏட்டின் அறியாமையும்.


ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் தோன்றியது பற்றி ஒருவர் கேட்ட கேள்விக்கு, 'அல் ஜன்னத்' இதழில், அதன் ஆசிரியர் அளித்துள்ள ஒன்றரைப் பக்கபதிலில், ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்களைப் பற்றித் தமது அறியாமையை. வெளிப்படுத்தி இருப்பதோடு தமது ஆணவத்தையும் பறை சாற்றியிருக்கிறார்.

அவர் தமது அறியாமையிலிருந்தும், ஆணவத்திலிருந்தும் விலகி நல்லவராகவேண்டும் என்பதற்காக சமாதானவழி இதழ் மூலமாக அவருக்கு சில அறிவுரைகளைக் கூறப்பட்டிருந்தது


பயங்கரவாத முல்லாக்கள்


உலகில் தோன்றிய எந்த சமயம் எதுவும் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை. குறைகளற்ற இறைமார்க்கமான இஸ்லாத்தில் பயங்கரவாததிற்கு அறவே இடமில்லை. அது மட்டுமல்ல, பயங்கரவாதத்திற்கு பதிலடியாக போது மன்னிப்பையும், கருணையையும் இஸ்லாம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

நபி (ஸல்) அவர்கள், தமது அன்பு மகளை கீழே தள்ளி அவளுடைய அகால மரணத்திற்கு காரணமான பயங்கரவாதிக்கும் தமது உற்ற தோழரின் உடலைக்கிழித்து அவருடைய ஈரலைக் கடித்து துப்பிய பயங்கரவாதிக்கும் இன்னும் தமக்கும் தம்மைச் தார்ந்தவர்களுக்கும், கொடுமைகள் பல இழைத்த கொடியவர்களுக்கும் பொது மன்னிப்பை வழங்கியதன் மூலம்

அழிவை நோக்கி அறிவியல் சாதனைகள்


அறிவியல் துறையில் பல் வேறு ஆய்வுகளைப் பற்றியும் கண்டு பிடிப்புகள் பற்றியும் திருக்குர்ஆன் முன்னறிவித்த போதிலும் அண்மைக்கால கண்டுபிடிப்பான படியாக்கத்தை அது வன்மையாக கண்டிக்கின்றது. 

படியாக்கம் என்பது என்ன? 

இயான் வில்மட் என்ற விஞ்ஞானி ஓர் ஆட்டின் பால் மடுவில் இருந்து எடுக்கப்பட்ட உயிரணு (cell) விலிருந்து மரபணு (gene) வை - பரம்பரையாய் இயல்புகள் அமைவதை நிர்ணயிக்கும் நுட்ப அறிவை தனியாக பிரித்தெடுத்தார். பின்னர் இன்னொரு ஆட்டின் கருவுற்ற முட்டை உயிரணுவிலிருந்து மரபணு அடங்கிய நியுக்கிளியஸ் எனப்படும் உட்கருவை மொத்தமாக அகற்றிவிட்டு முந்தைய ஆட்டின் மரபணுவை அதனுடன்

இறைவனின் தீர்ப்பே இறுதியானது


'ஜமாத்துல் உலமா' ஆசிரியரை ஒரு விஷயத்திற்காக நாம் பாராட்ட வேண்டும்! அவர் தனது தந்தை வழியை தப்பாது கடைப்பிடித்து வருவதோடல்லாமல் தந்தையாரின் அந்தக்கால சரக்குகளுக்கு, அவை'அவுட் ஆப் டேட்' ஆனவையாய் இருந்தும், தகுந்த 'மார்கெட்' பிடிக்க தவறாது முயன்று வருகிறார்.

எங்கேயாவது அஹ்மதியா இயக்கத்திற்கு எதிரான செய்திகள் காணப்படுகிறதா என எதிர்பார்த்து காத்திருந்து அவற்றைக் கண்டவுடன் தனது ஏட்டில் வெளியிட்டு தனது தந்தையாரின் நூல்களுக்கு அதோடு விளம்பரமும் செய்து வருகிறார். இந்த சாதுர்யம் யாருக்கு வரும்?


கிறிஸ்மஸ் ஒரு கேள்விக்குறி


டிசம்பர் 25 ஆம் நாளைக் கிறிஸ்தவர்கள் இயேசுவின் பிறந்த நாளாக - கிறிஸ்மஸ் பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள். ஆனால் இயேசுவின் பிறந்த நாள் டிசம்பர் 25 அல்ல!

இயேசு டிசம்பர் மாதத்தில் பிறக்கவில்லை என்பதற்குப் பைபிளிலேயே ஆதாரம் இருக்கிறது. லூக்கா 2:8 இல் இயேசு பிறந்த நிகழ்ச்சியை விவரிக்கையில், "அப்போது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல் வெளிகளில் தங்கி இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருந்தார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


சிலுவையின் வீழ்ச்சியும் இஸ்லாத்தின் வெற்றியும்!


ஆங்கிலேயர்கள் உலகின் பல நாடுகளை தம்வசப்படுத்தி கொண்டிருந்த காலத்தில் இந்தியாவிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் ஏனைய முஸ்லிம் நாடுகளிலும் கிருஸ்தவ மார்க்கம் தீவிரமாகப் பிரச்சாரம் செய்யப்பட்டிருந்தது. அக்காலத்தில் இந்தியாவை ஒரு கிருஸ்தவ நாடாக்க பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஐரோப்பிய நாடுகளிலிருந்து கிருஸ்தவ பிரசாரகர்கள் பெருவாரியாக இங்கு வந்திருந்தனர். அவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் ஊக்கத்துடனும் கிருஸ்தவ மார்க்கத்தை இந்தியாவெங்கும் பரப்பும் முயற்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். கிருஸ்தவ மார்க்கத்தை பரவச்செய்வதில் அப்போதைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அவர்களுக்கு பெரும் ஒத்துழைப்பு தந்ததோடு அதற்க்கான எல்லா உதவிகளையும் அளித்திருந்தனர்.


இயேசுவின் இரண்டாவது வருகை - ஒரு தவறான கண்ணோட்டம்


'இரண்டாவது வருகை' பற்றிய நம்பிக்கை இயேசுவின் காலத்தில் கூட இருந்தது. எலியா தீர்க்கதரிசி மீண்டும் வருவார் என அக்காலத்து யூதர்கள் நம்பினார்கள். (இன்றும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.) ஏனெனில் பழைய ஏற்பாட்டில் ,

"எலியா சுழல் காற்றில் பரலோகத்திற்கு ஏறிப்போனான்" (11 இராஜாக்கள் 2:7)

என்று காணப்படுகிறது. ஆனால் எலியா வானத்திலிருந்தோ பரலோகத்திலிருந்தோ வருவார் என்பதை இயேசு ஏற்கவில்லை. புதிய ஏற்பாட்டில் இவ்வாறு காணப்படுகிறது. :-


இயேசு பிசாசினால் சோதிக்கப்பட்ட கதை


தம் இன மக்களுக்குப் போதித்து நல்வழிகாட்டும் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொள்ளும் முன்னர் அனேகமாக அனைத்து தீர்க்கதரிசிகளும் இறையடியார்களும் தனிமையை நாடிச் சென்றதாகவும், விரதமிருந்து ஏக இறைவனை வழிபாட்டு வருவதிலேயே தம் நேரத்தை செலவிட்டதாகவும் நாம் அறிவோம். மோசே தீர்க்கதரிசி சீனாய் மலைக்கும், புத்த பிரான் ஒரு போதி மரத்துக்கும், இஸ்லாம் தந்த நபிகள் நாயகம் மக்கா அருகில் உள்ள ஒரு மலைக் குகைக்கும் சென்று இறைவனை தியானித்ததை இங்கு எடுத்துக்காட்டாக கொள்ளலாம். தினசரி குடும்ப வாழ்வின் சிக்கல்களிலிருந்தும், தொல்லைகளிலிருந்தும் தூர விலகிச் சென்று எவருடைய இடையூறுமின்றி இறைவணக்கத்தில் தம்மை ஈடுபடுத்தி இறைவனின் தொடர்பைப் பெற்றுக் கொள்வதற்கு இத்தகைய தனிமையும்

இறுதி வெற்றி இறைத்தூதர்களுக்கே


ஓர் இறைத்தூதருக்கு எதிராக அவரின் எதிரிகளின் வாயிலிருந்து வெளிப்படும் வசை மொழிகள், சத்தியத்திற்கு எதிராக எழுதப்பாடும் எழுத்துக்கள் ஆகியன இறை கோபத்திற்கு ஆளானவைகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவற்றை அவர்கள் தங்களின் கரங்களாலே தேடிக் கொள்கின்றனர். பிறரை வசைமொழிவதும், இட்டுக்கட்டிப் பேசுவதும் இறைசாபத்திற்கு உரியனவையே . தங்களுடைய திட்டங்களாலும் அடிப்படையில்லாத ஆதாரமற்ற போய்க்கூற்றுகளாலும் இறைவனின் என்னத்தை முறியடிக்கலாம் என இவர்கள் நினைக்கின்றார்களா? அல்லது உலகை ஏமாற்றி, வானத்திலிருந்து தீர்ப்பளிக்கப்பட்ட இறைவனுடைய பணிகளை நிறுத்தி விடலாம் என கருதுகின்றார்களா? சத்தியத்திற்கு எதிராக இவர்களது திட்டங்களில் இதற்க்கு முன் எப்போதாவது வெற்றி இவர்களுக்கு

இரு ஈஸா நபிமார்களின் இரு வேறு தோற்றங்கள்.


ஹதீஸ்களிலும் காதியானிகள் கை வரிசை என்ற எனும் தலைப்பில் பக்கம் 56 இல் கூறுகிறார் நான் ஈஸாவையும், மூஸாவையும் கண்டேன். ஈசா சிவந்த நிறமும் சுருண்ட கேசமும், விரிவடைந்த நெஞ்சமும் உடையவராக இருந்தார். (புகாரி பாகம் 2, கிதாபு பத் உல்கல்க்) 

நான் ஒரு தரிசனத்தில் கஹ்பாவை வலம் வருவது போல் கண்டேன். அப்போது திடீர் என்று ஒருவர் என் முன் தோன்றினார். அவர் கோதுமை நிறமும், நீளமான கேசமும் கொண்டிருந்தார். இவர் யார் என கேட்ட பொது இவர் இப்னு மர்யம் என்று கூறப்பட்டது. (புகாரி கிதாபுல் பிதன்)


இமாம் மஹ்தியை நிராகரிப்பவர்கள் யார்?


ஆதம் நபி முதல் நபி (ஸல்) அவர்கள் வரை வந்த தூதர்கள் அனைவரும் கடுமையான எதிர்ப்புக்கு ஆளானார்கள். இறுதியில் இவ்விறை தூதர்களே வெற்றிபெற்றார்கள்.

ஆதமின் சந்ததிகள் மீது வருத்தப்பட்டு அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான். 'அந்தோ பரிதாபம்! மக்களிடம் எப்பொழுதெல்லாம் இறைத்தூதர்கள் தோன்றினார்களோ அப்பொழுதெல்லாம் மக்கள் அவர்களை எதிர்த்தும் ஏளனம் செய்தும் அக்கிரமத்திற்கும்,அநியாயத்திற்கும் ஆளாக்கினார்கள்" அல்லாஹ் நமக்கு எடுத்துரைக்கும் சட்டம் இதுதான். இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் சட்டப்படி மக்களால் எதிர்க்கப்பட்ட எதிர்ப்பு அணி திரட்டப்பட்ட -நபிமார்களை, மக்கள் எதிர்க்கின்றார்கள் என்ற ஒரே

"இறுதி நபித்துவ பேரவை"யின் சூழ்ச்சியும் இயக்கத்தின் எழுச்சியும்


அஹ்மதியா இயக்கத்திற்கு எதிராக பாகிஸ்தானிலுள்ள முல்லாக்கள் அங்குள்ள பாமர மக்களைத் தூண்டி வன்முறையிலும் காட்டுமிராண்டித்தனத்திலும் அவர்களை ஈடிபடுத்தி வருவதைப் போன்று இங்கும் குழப்பத்தை ஏற்படுத்த சில முல்லாக்களும் அவர்களின் ஆதரவாளர்களும் முயன்று வருகின்றனர். 'தஹப்புஸே கதமுன் நுபுவத்'.இறுதி நபித்துவ பாதுகாப்பு பேரவை என்ற அமைப்பை இவர்கள் ஏற்படுத்தி இருப்பதும் அதன் முதல் கூட்டத்தை சென்னையில் நடத்தி அஹ்மதி முஸ்லிம்களுக்கு எதிராக சில அபத்தமான தீர்மானங்களை வெளியிட்டிருப்பதும் பாகிஸ்தான் பயங்கரவாத முல்லாக்களை இவர்கள் பின்பற்ற நினைக்கிறார்கள் என்பதையே எடுத்துக் காட்டுகிறது. ஏனெனில் இந்த 'தஹப்புஸே கதமுன் நுபுவ்வத்' முதன் முதலில் உருவாக்கி செயல்பட்டு வருவது பாகிஸ்தானிலேயேயாகும்.


காத்தமுன்னபிய்யீன் - ஓர் ஆய்வு


அகிலத்திற்கும் அருட்கொடையாகத் தோன்றிய ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் புறமிருந்து கிடைத்த ஒப்பற்ற,மகத்துவமிக்க பட்டம் தான் காத்தமுன்னபிய்யீன் என்பது. இதைக் குறித்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்:

மாகான முஹம்மதுன் அபா அஹதின் மின் ரிஜாலிகும் வலாகின் ரசூலுல்லாஹி வ காத்தமுன்னபிய்யீன். (33:40)

'முஹம்மது உங்களுள் எந்த ஆணுக்கும் தந்தையல்ல. ஆனால் அவர் அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களுக்கெல்லாம் காதமாகவும்(முத்திரை) விளங்குகின்றார்கள்.' (33:40)


இறைவனின் வல்லமையை நம்பாதவர்களா அஹ்மதிகள்?


ஈசா நபி மரணித்துவிட்டார்கள் என்று திருக்குர்ஆன், நபிமொழி அடிப்படையில் ஆதாரங்களைக் காட்டி நிரூபித்துவரும் அஹ்மதி முஸ்லிம்களின் வாதத்தை மறுக்க முடியாத சில மௌலவிகள் தற்போது குரான், நபிமொழியை ஒருபுறம் வைத்துவிட்டு ஹஸ்ரத் ஈசா(அலை) அவர்களை உடலுடன், உயிருடன் வானத்திற்கு உயர்த்துவதற்கு இறைவனுக்கு வல்லமை இருக்கிறது: அஹ்மதிகள் இறைவனின் வல்லமையை மறுக்கின்றனர்: அவர்களுடன் பேசாதீர்கள் என்று கூற ஆரம்பித்துள்ளனர். அது மட்டுமல்ல ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக மரணிக்காமல் வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறி வந்தவர்கள் இப்போது அவர் சூன்யமாகி விட்டார் என்று கூறத்தொடக்கி விட்டனர்.