அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

கருத்து பரிமாற்றம் செய்ய முன் வாருங்கள் - சவூதி ஆலிம்களுக்கு ஹஸ்ரத் கலீபத்துல் மஸீஹ் அவர்களின் அழைப்பு


சவூதி அரேபியாவிலிருந்து வெளிவருகின்ற 'THE MESAAGE' என்னும் பத்திரிகையில் சமயத் தொடர்பு நிருபர் காலிப் ஜோங்கர் என்பவர் 'முதுகெலும்பு இல்லாத நயவஞ்சகன்' என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

அஹ்மதிய்யா ஜமாத்திற்கு முதுகெலும்பு இல்லை என்றால் அது உலகில் இவ்வாளவு பெரிய ஜமாத்தாக எவ்வாறு வளர்ந்தது?

உண்மையில் அவர் எழுதிய கட்டுரை முற்றிலும் பொய்யான செய்திகளைக் கொண்டதாகும். அவர் அந்தக் கட்டுரையில் சவூதி அரேபியாவில் அஹ்மதிகள் பலர் உள்ளனர். என்னுடன் விவாதம் செய்ய வருமாறு அவர்களுக்குப்
பலமுறை சவால் விட்டேன். ஆனால் அவர்கள் வரவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது வெறும் உளறலேயன்றி வேறில்லை. அவர் யாரை சவால் விட்டழைத்தார். என்பதை என்னிடம் கூறட்டும்.

உலகளாவிய அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தின் தலைவர் கலீபத்துல் மஸீகாகிய நான் இருக்கின்றேன். நீங்கள் எனக்கு எழுதுங்கள். உங்கள் சவாலை நான் ஏற்கின்றேன். நீங்கள் என்னிடம் வருமாறு நான் உங்களை அழைக்கின்றேன். இங்கே வர நீங்கள் ஏன் அஞ்சவேண்டும்.? இங்கே எவரிடமும் எவ்வகை பகைமையும் வெறுப்பும் இல்லை. இங்குச் சர்வதிகார ஆட்சி இல்லை. கருத்துப் பரிமாற்றம் செய்வதற்கு இங்குத் திறந்த அரங்குகள் உள்ளன. உங்களுடைய மன்னர்கள். இங்கே வந்து தங்கள் விருப்பம்போல் உலவி வருகின்றனர். அவர்களுக்கு எந்தத் துன்பமும் ஏற்பட்டதில்லை. எனவே உங்களுக்கும் எந்தத் துன்பமும் ஏற்படாது.

நீங்கள் இங்குவந்து விவாதம் செய்வதற்கு, உங்கள் போக்குவரத்திற்க்கான எல்லாச் செலவுகளையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.