அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

தொழுகையில் இன்பம்

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் மஹ்தி அவர்கள் கூறுகின்றார்கள்:

தொழுகை என்பது, சிறப்பான ஒரு பிரார்த்தனை ஆகும். ஆனால், மக்கள் இதனை ஒரு பாரமாகக் கருதுகின்றனர்.
எந்தத் தேவையும் இல்லாத இறைவனுக்கு, மனிதன் இறைவனை வணங்க வேண்டும், திக்ரு செய்ய வேண்டும் என்பது தேவையில்லாததுதான். ஆயினும் தொழுகை, திக்ரு முதலியவற்றில் உள்ள பயன்கள் மனிதனுக்கே கிடைக்கின்றன. இவற்றின் மூலம் மனிதன் தான்