நான் சொன்னதாக ஓர் அறிவிப்பு (உங்களுக்கு)க் கிடைத்தால் அதைக்குரானுடன் ஒத்துப் பாருங்கள். குரானுக்கு இணக்கமாக அது இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையெனில் (நான் சொன்னதாக இருக்காது என்று) அதைத் தள்ளி விடுங்கள்' (1.பைஹகீ, 2.தாருல் குத்னீ) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நினைவில் வைத்துக் கொண்டு, 'லா நபிய்ய பஃதீ' என்ற ஹதீஸைக் குர் ஆனுடன் ஒத்துப் பார்க்க வேண்டும்.
அல்லாஹ் திருக்குரானில் பல வசனங்களில் நபிமார்கள் வரலாம் என்று கூறியிருக்கும் போது, அதற்க்கு மாற்றமாக இந்த ஹதீசுக்கு பொருள் கொடுப்பது தவறு.