அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

இமாம் மஹ்தி (அலை) அவர்களைப் பற்றி எதிரிகளின் கூற்று.


நூற் முஹம்மது மௌலான நக்ஸபந்தி தில்லி சாஹிப் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது மூலமாக கிறிஸ்தவத்திற்கு எதிரான பலப்பரீட்சையில் இஸ்லாத்திற்கு கிடைத்த இந்த மகத்தான வெற்றியைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்.

.... இதே காலகட்டத்தில் பாதிரியார் லேப் ராய், பாதிரியார்களின் ஒரு மிகப் பெரிய கூட்டத்துடன், சிறிது காலத்திற்குள் முழு இந்தியாவையும் கிறித்துவ மதமாக்கிவிடுவேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு ஆங்கிலேயர்களின் தலைமையகத்திலிருந்து புறப்பட்டார். ஆங்கிலேயர்களின் தலைமையகத்திலிருந்து பெரும் பெரும் பண உதவி மற்றும் பிற்காலத்தில் செய்யப்படும் தொடர் உதவிகளின் வாக்குறுதியோடு இந்தியாவில் நுழைந்து பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தினார். ஹஸ்ரத் ஈஸா

அல்லாஹ் பெரிய சதிகாரனா? அபூஅப்தில்லாஹ்விற்கு பதில்


இன்னும் (ஈஸாவைக் கொல்ல) அவர்கள் திட்டமிட்டுச் சதி செய்தார்கள், அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான் (3:54) (அபூ அப்தில்லாஹ் நூல் பக்கம் 18)

யூதர்கள் ஈஸா(அலை) அவர்களைப் பிடித்து சிலுவையில் அறைந்து கொன்றுவிட எண்ணினர். இது யூதர்கள் செய்த சதி, அல்லாஹ்வோ ஈஸா (அலை) அவர்களை யூதர்கள் பிடிக்க விடாது தன்னளவில் உயர்த்திக் காப்பாற்றி விட்டான். யூதர்கள் வேறொரு யூதனைப் பிடித்து சிலுவையில் அறைந்து கொன்று விட்டனர். இவ்வாறு யூதர்களின் சதியை அல்லாஹ் முறியடித்துவிட்டான். எனவே அல்லாஹ் சதிகாரர்களுக்கு எல்லாம் மிகப் பெரிய சதிகாரன். (அபூ அப்தில்லாஹ் எழுதிய நூல் : பக்கம் 18-20)

ஆங்கிலத்தில் வஹி


எந்த நபிக்கும் அவரது தாய் மொழியிலேயே வஹி வந்திருக்கிறது. ஆனால் இமாம் மஹ்தி (அலை) அவர்களுக்கு ஆங்கிலத்தில் வஹிவந்திருக்கிறது. இது குறித்து ஒரு மௌலவி எள்ளி நகையாடியுள்ளார். 

நம் பதில்: 

ஏளனம் செய்யப்படாத எந்த நபியும் மக்களிடத்தில் வரவில்லை. என்கிறது திருக்குர்ஆன். நிராகரிப்போர் எள்ளி நகையாடுவது இயல்பு அது அவர்களின் ஆணவத்தையும் அறியாமையையுமே காட்டுகிறது. 

நபிமார்களுக்கு அவர்களுடைய தாய் மொழியில் ‘வஹி’ வந்ததாக

பொய்யர் பி.ஜே யின் உளறல் – நூல்களை பதுக்கிவைத்தார்களா?


மிர்ஸா குலாம் மதத்தைப் பின்பற்றும் காதியானிகள் எதை இறைச் செய்தி என்று கூறுகின்றார்களோ அதை அனைத்து மக்களும் சென்றடையும் வகையில் பரவலாக அச்சிட்டு வெளியிடத் தயாரா என்று முஸ்லிம்கள் எழுப்பும் கேள்விக்கு இன்று வரை அந்த மதத்தினர் பதில் கூறவில்லை. அதைப் பரப்பவுமில்லை. திருட்டுப் பொருளைப் பதிக்கி வைத்திருப்பதைப் போன்று தான் காதியானி மதத்தவர்கள் மிர்ஸா குலாமின் உளறல்களைப் பதுக்கி வைத்திருக்கிறார்கள் (9 வது பதிப்பு பக்கம் 1264)

நம் பதில்:

1. உலக மகாப் பொய்யர் பி.ஜேயின் இந்த உளறல், இவரது திருக்குர்ஆன் மொழியாக்கத்தில் 9 வது பதிப்பில் உள்ளது. இது மே 2010 இல் வெளியானது.


நபி கோழையாவார்களா? - அபூ அப்தில்லாஹ்விற்கு பதில்


அபூ அப்தில்லாஹ் 14 வது பக்கத்தில் எழுதுகிறார்

காதியானிகள் சொல்வதுபோல் உண்மையான ஈஸா(அலை) அவர்கள் சிலுவையில் அறையப்பட்டிருந்து இறக்கப்பட்டிருந்தால்,
  • அந்நிலையில் அவர்களை விட்டுவிட்டு அவர்களின் சீடர்கள் பிரிந்து சென்றிப்பார்களா?
  • ஈன்றெடுத்த தாயும், தன் உண்மை சீடர்களும் அறியாமல் ஈஸா(அலை) காஷ்மீருக்கு ஓடி ஒளிந்துகொண்டார்களா?
  • பெற்ற தாயையும், உற்ற சீடர்களையும் மறந்து தனக்குற்ற நபித்துவப் பணியையும் புறக்கணித்து ஒன்றல்ல, இரண்டல்ல நூற்றியிருபது வயது வரை வாழ்ந்திருப்பார்களா?

திருக்குரானின் 5:75, 3:145 வசனங்களுக்கு அபூ அப்தில்லாஹ் தரும் தவறான விளக்கம்


அபூ அப்தில்லாஹ் ஆதாரம் எண் 3, 4

அபூ அப்தில்லாஹ் தன் நூலின் பக்கம் 22 முதல் 25 வரை, ஈஸா(அலை) அவர்கள் மரணிக்கவில்லை; இனிமேல் மரணிப்பார் என்பதற்கு ஆதாரமாக 5:75, 3:144 வசனங்களை விளக்கியுள்ளார். 

“முஹம்மது தூதரேயன்றி (வேறு) அல்லர். இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் சென்று விட்டார்கள்; அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவீர்களா?” (திருக்குர்ஆன் 3:144) மேலும் மர்யம் உடைய குமாரர் மஸீஹ் இறைத் தூதரேயன்றி (வேறு) அல்லர். இவருக்கு முன்பும் தூதர் பலர் சென்று விட்டார்கள். இவருடைய தாயார் மிக்க உண்மையானவர். இவ்விருவரும் உணவு உண்பவர்களாகவே இருந்தனர்.” (திருக்குர்ஆன் 5:75) 


சனிக்கிழமை மீன் பிடித்தவர்கள் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் உருமாறினார்களா?


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 23 இல் சனிக்கிழமை என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

சனிக்கிழமை முழுவதும் மீன் பிடிக்கும் தொழில் செய்யக்கூடாது என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அதை அவர்கள் மீறியதால்தான் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மாற்றப்பட்டனர். 

நம் விளக்கம்: 

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 


தவறான அறிவியல் விளக்கம் - பூமியைப் போன்று பிற கோள்களில் உயிரினம் வாழ முடியுமா? முடியாதா?


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 175 இல் இதில்தான் வாழ்வீர்கள் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்; 

இதில் தான் வாழ்வீர்கள் என்பது பூமியைத் தவிர வேறு எங்கும் மனிதர்கள் இயற்கையாக வாழ முடியாது என்று அடித்துக் கூறுகிறது... எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால் மட்டுமே அன்றைய நிலையில் இதனைக் கூற முடியும். எனவே இதுவும் இறை வேதம் எனபதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது (பார்க்க திருக்குர்ஆன் 2:36, 7:10, 7:24-25, 30:25) 

நம் விளக்கம்: 


நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதா? இல்லையா?


பீ.ஜே திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 357 இல் சூனியம் என்னும் தலைப்பில் கடைசி 5 வரிகளில் இவ்வாறு எழுதுகிறார்: 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்து அவர்களை யாரும் முடக்கவில்லை என்பதுதான் சரியான கருத்தாகும் என்றும் ஆனால் அவரே திருக்குர்ஆன் விளக்கம் எனும் நூலில் பக்கம் 88-90 இல், நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்றும் எழுதியுள்ளார். 

நம் கேள்வி; 


நஜாத் நிர்வாகிகளின் கூற்றுக்கு பதில்!


திருச்சியில் நடைபெற்ற அந்-நஜாத் மாநாட்டில் அதன் நிர்வாகி ஜனாப்K.M.H அபூ-அப்தில்லாஹ் அவர்கள் அஹ்மதிகள் முஸ்லிம்கள் அல்ல என்பதற்கு மிகப் பெரும் சான்று ஒன்றை கூறியுள்ளார். அதாவது மிர்ஸா குலாம் அஹ்மதை நபியென்று ஒப்புக்கொள்ளாதவர்களை முஸ்லிம்கள் என்று அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அப்படி ஏற்றுக்கொள்கிறோம் என்று அவர்கள் கூறினால், அதனை அவர்களது ஏடான சமாதான வழி இதழில் பிரசுரிக்கட்டும் ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள்.

இதுபற்றி எங்கள் கொள்கை அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் கூறிய போதனைகளின் அடிப்படையாகும்.