அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

இஸ்லாமிய குற்றயியல் சட்டம் (மௌலவி முஹம்மது உமர் H.A)


இவ்வுலக வாழ்வில் மனிதன் இரண்டு விதமான தீமைகளிலும், பாவச் செயல்களிலும் ஈடுபடுகின்றான். ஒன்று ஆன்மீகரீதியான பாவச் செயல்கள். வெளிப்படையான விதத்தில் நிரூபிக்கப்படும் குற்றங்களுக்கு இவ்வுலகத்திலேயே தண்டனை கிடைக்கிறது. ஆனால் யாருக்குமே தெரியாமல் செய்யப்படும் பாவங்களுக்கும், ஷரியத்தின் கட்டளைகளுக்கு எதிராக செய்யப்படும் தீமைகளுக்கும் இறைவனே தண்டனை கொடுக்கிறான். 

இவ்வுலகில் இதுவரை தோன்றியுள்ள எல்லா அரசாங்கங்களிலும், அவற்றின் சட்டங்களிலும் பல்வேறு குற்றங்களுக்கேற்ற விதத்தில் தண்டனை முறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பொதுவான நன்மைகளையும், மக்களின் நலனையும் கருத்தில் கொண்டுமே இந்தத் தண்டனைகள்

கரைபடியாத மறைநூல் – திருக்குர்ஆன்


“இன்னா நஹ்னு நஸ்ஸல்னாத் திக்ர வ இன்னா லஹு ல ஹாபிலூன்.” 

நிச்சயமாக நாமே இந்த திக்ரை (திருக்குர்ஆனை) இறக்கினோம். மேலும் நாமே இதன் பாதுகாவலனாக இருப்போம்” (திருக்குர்ஆன் 15:10) 

திருக்குர்ஆன் இறைவனால் அருளப்பட்ட மறைநூல் மட்டுமன்று அவனால் எல்லாக் காலத்திலும் பாதுகாக்கப்படுகின்ற அற்புத நூலும் கூட என இத் திருவசனம் அறிவுறுத்துகின்றது. 

வேத நூற்களாகட்டும, வேதாகமமாகட்டும் அவற்றில் இறை வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்று கூறலாமேயொழிய அவை முழுக்க முழுக்க

அஹ்மதிய்யா ஜமாத்தும், கவிஞர் இக்பாலும்


தமிழ் நாடு வக்பு வாரியத்தின் மாத ஏடான ‘இஸ்மியில்’ மௌலான என்பவர் அஹ்மதிய்யா ஜமாஅத் பற்றிய தமது கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார், 

“மகாகவி இக்பால், காதியானிகளை முஸ்லிம் சமுதாயத்தில் இருந்து மாற்றிவிடவேண்டுமென வெகுகாலத்திற்கு முன்பே கூறினார். அவருடைய கூற்று அப்பொழுது முக்கியத்துவம் இல்லாமல் ஆக்கப்பட்டிருந்தது”

அஹ்மதிய்யா ஜமாத்தை எதிர்ப்பவர்கள், ‘அஹ்மதிகள் முஸ்லிம் அல்லாதவர்கள் என்று கூறுவதற்கு, கவிஞர் இக்பாலின் வாலைப்பிடித்துக் கொண்டு, அந்த ஒரு சான்றே போதுமானது எனப் பேசுவது வழக்கம். ஆனால், அல்லாமா இக்பால், பாக்கிஸ்தானில் உள்ள ஸியால் கோட்டில் படித்துக்

அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பின்பற்றுபவர்களுக்கு கிடைக்கும் இறையருட்கள்.


“எவர் அல்லாஹ்வையும், அவனது ரெஸுலையும் (நபி (ஸல்) அவர்களையும்) முழுமையாகப் பின்பற்றுவார்களோ, அவர்கள் அல்லாஹ்வின் அருள்பெற்றவர்களான நபிமார்கள், ஸித்திக்குகள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்கள்; இவர்கள் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர். இது அல்லாஹ் விடமிருந்து வரும் அருளாகும். அல்லாஹ் எல்லாம் அறிந்தவனாக இருக்கின்றன.” (4:70,71) 

முஸ்லிம்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இறையருட்கள் இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சூரா பாத்திகாவில் வந்துள்ள அதே சொற்கள் அதாவது சிராத்தே முஸ்தகீம் (நேரான வழியைக்) காட்டுதல், நேரான வழியும் இறையருட்களைப் பெற்றவர்களின் நேரான வழியாகும். மேலும்

மூஸா நபியின் கல்லறையும், ஈஸா நபியின் கல்லறையும்.


உபகாமம் 34:6 இல் “ இந்நாள் வரைக்கும் அவன் பிரேதக்குழியை அறியான்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மோசேயின் வாழ்க்கை முடிவு, இயேசுவின் வாழ்க்கை முடிவைப்போல் கட்டுக்கதைகள் நிறைந்தது. 

“மோசே மக்களை விட்டுப் பிரிந்து சென்ற பின்னர் நீபோ மலையுச்சியில் எலிசேரையும் யோசுவாவையும் சந்திப்பதற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு மேகம் அவர் மீது வந்து நின்றது. அவர் மறைந்துவிட்டார்.” உண்மை இவ்வாறிருக்கையில் அவரது அதி உன்னத நற்குணங்கள் காரணமாக அவர் ஒரு இறைவனாக மாறிவிட்டார் என்று மக்கள் சொல்லலாம் என்ற பயத்தினால் தாம் மரணித்துவிட்டதாக வேதாகமத்தில் அவர் எழுதி வைத்துச் சென்றார். (Ant. iv..8 and 48) 

திருக்குரானும் இயேசுவும்


'இயேசுவைப் பற்றி திருக்குரானில் கூறப்பட்டிருக்கிறது' என கிருஸ்தவ போதகர்கள், முஸ்லிம்களிடையே பிரச்சாரம் செய்து வரும் இந்நாட்களில், இயேசுவை பற்றியும் இக்கால கிறிஸ்தவர்களின் நம்பிக்கைப்பற்றியும் திருக்குர்ஆன் என்ன கூறி இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தி அது எந்த வகையில் பைபிளுடன் ஒத்துப்போகிறது என்பதை விளக்கிட விரும்புகிறோம். 

"எல்லாவற்றையும் சோதித்து பார்த்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்" (1 தெசலோனி 5:21) என்ற பைபிளின் போதனைக்கிசைய இக்கருத்துக்களை கிருஸ்தவ நண்பர்கள் நடு நிலை நின்று ஆராய்ந்து உண்மையெனக் கண்டவற்றை உளமார ஏற்றுக்கொள்ள வேண்டுகின்றோம். 

இறுதி வெற்றி இறைத்தூதர்களுக்கே


ஓர் இறைத்தூதருக்கு எதிராக அவரின் எதிரிகளின் வாயிலிருந்து வெளிப்படும் வசை மொழிகள், சத்தியத்திற்கு எதிராக எழுதப்படும் எழுத்துக்கள் ஆகியன இறை கோபத்திற்கு ஆளானவைகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவற்றை அவர்கள் தங்களின் கரங்களாலே தேடிக் கொள்கின்றனர். பிறரை வசைமொழிவதும், இட்டுக்கட்டிப் பேசுவதும் இறைசாபத்திற்கு உரியனவையே . தங்களுடைய திட்டங்களாலும் அடிப்படையில்லாத ஆதாரமற்ற பொய்க்கூற்றுகளாலும் இறைவனின் என்னத்தை முறியடிக்கலாம் என இவர்கள் நினைக்கின்றார்களா? அல்லது உலகை ஏமாற்றி, வானத்திலிருந்து தீர்ப்பளிக்கப்பட்ட இறைவனுடைய பணிகளை நிறுத்தி விடலாம் என கருதுகின்றார்களா? சத்தியத்திற்கு எதிராக இவர்களது திட்டங்களில் இதற்க்கு முன் எப்போதாவது வெற்றி இவர்களுக்கு கிடைத்திருக்குமானால், இப்போதும் இவர்கள் வெற்றி பெற்றிருக்கக்கூடும்.

இறைவனே எங்களுடைய திட்டங்களின் நடுத்தூணாக இருக்கின்றான். ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள்.


உண்மையிலேயே நீங்கள் இறைவனுக்காக ஆகிவிடுவதென்றால் அந்த இறைவனும் உங்களுக்காகவே ஆகிவிடுவான் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் உறங்குகின்றபோது அவன் உங்களுக்காக விழித்திருப்பான். நீங்கள் உங்களுடைய எதிரிகளைப் பற்றி கவனமற்றிருக்கும்போது உங்களுடைய இறைவன் அவர்களைக் கண்காணித்து அவர்களுடைய சதித்திட்டங்களை முறியடிப்பான். உங்களுடைய இறைவன் எவ்வளவு வல்லமை மிக்கவன் என்பதை நீங்கள் இன்னும் உணரவில்லை. நீங்கள் அதனை உணர்ந்திருந்தால் உலகிற்காக கவலைப்படக்கூடிய ஒருநாள் கூட உங்களுக்கு இராது. தன்னிடத்திலே ஒரு பெரும் பொக்கிஷத்தைக் கொண்டுள்ள ஒரு மனிதன் அவனிடமிருந்து ஒரு காசு காணாமற் போனால் அதற்காக அழுது புலம்புவானா? அதற்காக தன்னை

எழுதுகோலே இன்றைய ஆயுதம்! - ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள்


இக்காலத்தின் தேவை வாளல்ல; பயன்படவேண்டியது பேனாவே என்பதை நன்குணர்ந்து கொள்ள வேண்டும். நமது எதிரிகள் இஸ்லாத்திற்கெதிராக எழுப்பியுள்ள சந்தேகங்களும், பல்வேறு அறிவியல் தத்துவங்களினால், இறைவனின் உண்மையான மார்க்கத்தைத் தாக்க முயன்றதும், பேனா என்னும் ஆயுதம்தாங்கி, அறிவியல் மற்றும் அறிவின் முன்னேற்றப் போர்களத்தில் இறங்கி, இஸ்லாத்தின் ஆன்மீகக் கம்பீரத்தையும், அதன் அந்தரங்க ஆற்றலின் அற்புதத்தையும் உலகுக்குக் காட்ட வேண்டிய அவசியத்தை எனக்கு உணர்த்தியது. 

இறைவனின் பேரருள் எனக்கு இருக்காவிடில், நான் ஒருக்காலும் இக் களம் புகும் தகுதி பெற்றிருக்கமாட்டேன். என் போன்ற ஓர் ஏழை மனிதனின் மூலமாக, அவனுடைய மார்க்கத்தின் கண்ணியம் வெளிப்பட வேண்டுமென

இமாம் மஹ்தி (அலை) அவர்கள் ஜிஹாதை தடை செய்துள்ளார்களா?


(இலண்டனில் நடைபெற்ற மஜ்லிசே – இர்ஷாத் என்னும் கேள்வி பதில் கூட்டத்தில் ஹஸ்ரத் கலீபதுல் மஸீஹ் மாற்றுமதத்தவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்கள். அந்த கேள்வி பதிலிருந்து இது எடுக்கப்பட்டுள்ளது.) 

கேள்வி: ஹஸ்ரத் மிர்ஸா குலாம்(அலை) அவர்கள் ஜிஹாதை தடை செய்துள்ளார்களா? 

இல்லை ஒரு போதும் இல்லை. ஜிஹாதின் பெயரால் போர் மூட்டுவதைத்தான் அவர்கள் தடைசெய்துள்ளார்கள். ஜிஹாதும். போரும் இரண்டு தனித்தனி விஷயங்களாகும். ஜிஹாதிலும் சில சந்தர்ப்பங்களின் போர் இடம் பெறுகின்றது. ஆனால் ஒவ்வொரு ஜிஹாதும் ஒரு போரல்ல.