அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

மவ்லான உபைதுல்லாஹ் சிந்தி அவர்களின் பார்வையில் ஈஸா (அலை) அவர்களின் மரணம்



உபைதுல்லாஹ் சிந்தி இவர் சியால்கோட்டில் உப்பல் கத்ரி என்ற குடும்பத்தில் 1872 மார்ச் 10 இல் பிறந்தவர். இவர் மாற்று மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு மாறியவர். தாருல் உலூம் தேவ்பந்த் மத்ராஸாவில் படித்து இஸ்லாமிய கல்வியை பயின்று பிராச்சாரகராக மாறியவர். இவர் 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி அன்று காலமானார். இவர் தேவ்பந்த் பிரிவில் பிரசித்து பெற்றவர். இவர் குர்ஆனுக்கு விளக்கம் எழுதியவர். இவர் எழுதிய தஃப்சீரின் பெயர் "இல்ஹாமூர் ரஹ்மான் ஃபி தஃப்சீருல் குர்ஆன்" என்பதாகும். இந்த தஃப்சீரில் முஸ்லிம்கள் ஈஸா அலை அவர்கள் உயிரோடு இருக்கிறார் என்று வைத்துள்ள கொள்கையானது பொய்யானது இது
யூதர்களிடமிருந்து வந்த கொள்கை, கட்டுக் கதை ஆகும் என்று கூறியுள்ளார். அது மட்டுமல்ல ஈஸா அலை உயிரோடு உள்ளார் என்பதற்கு குர்ஆனில் எந்த வசனமும் இல்லை என்பதையும் ஆணித்தரமாக கூறியுள்ளார். அவர்கள் இது சம்பந்தமாக கூறியுள்ள விஷயத்தை நாம் கோடிட்டு காட்டியுள்ளோம். அதன் பொருள்: 

"அதாவது "முமீதுக்க" நான் உன்னை மரணம் அடைய செய்வேன். மக்கள் மத்தியில் பிரபல்யமாக இருக்கக்கூடிய ஈஸா உயிரோடு இருக்கிறார் என்ற கொள்கையானது யூதர்களின் கட்டுக்கதையாகும். மேலும் சாபியின் சுய கருத்தைக் கொண்ட கதையாகும். முஸ்லிம்களில் உஸ்மான் (ரலி) காலத்தில் நடந்த குழப்பத்திற்கு பிறகு அன்சார் பனி ஹாஷிம் அவர்கள் மூலமாக இந்த விஷயம் பரப்பட்டுள்ளது. இவர் சாபியும், யூதராகவும் இருந்தவர்.........( கோடிட்டு காட்டியதிற்கான பொருள்:)

"குர்ஆனில் ஈஸா மரணிக்கவில்லை என்பதை நிரூபிக்கக்கூடிய எந்த வசனமும் இல்லை"

மூல ஆதாரத்தை மேலே பார்க்கவும்