அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

ஜமாத்தே இஸ்லாமியின் அறியாமை


அல்லாஹ் காத்தமுன்னபியீன் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் உட்பட எல்லா நபிமார்களிடமும் வாங்கிய ஓர் உடன் படிக்கயைப்பற்றி நபிவழி டிசம்பர் இதழில் வெளிவந்தது. அதுபற்றி (islamic foundation trust (IFT)) சார்பாக வெளியிடப்படும் மாதமிருமுறை பத்திரிகையாகிய "சமரசம்' ஜனவரி இதழில் ஒரு மறுப்புரையை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த மறுப்புரைக்கு அடிப்படை மௌலவி மௌதூதியின் "தர்ஜுமானுல் குரான்" இதழில் வெளியான 'சிந்தனையை கிளறக்கூடிய' (?) பதில்கள்தான் எனவும். குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதே தர்ஜுமானுல் குர்ஆனில் முஸ்லிம்களின் உள்ளம் ஒரு நபியை தான் கேட்கின்றது என்பதை மௌலவி மௌதூதியே எழுதி வைத்திருப்பதை இவர்கள் படிக்காதிருப்பது பரிதாபமே!

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் பிரதிப் பிம்பம் நானே! - ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்கள்


கொள்கையைப் பொறுத்த அளவில் இறைவன் விரும்புவதெல்லாம் இறைவன் ஒருவனே என்பதை உளப்பூர்வமாக நம்வுவதும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவனுடைய தூதராகவும் 'காதமுல் அன்பியா' வாகவும் அனைத்து தூதர்களையும் விட மேலானவராகவும் நம்புவதும் ஆகும். எவர்மீது 'முஹம்மதிய்யத்' தின் பிரதிப்பிம்பம் என்னும் போர்வைப் போடப்படுகின்றதோ அவரைத் தவிர வேறு எவருக்கும் நபியாக வர இயலாது. ஓர் ஊழியன் தனது எஜமானனைவிட்டும் வேறுபட்டவன் அல்லன். ஒரு மரத்தின் கிளை அதன் வேரிலிருந்து வேறுபட்டதன்று. சுருக்கமாக எஜமானனிடத்திலேயே தன்னை முழுமையாக அர்பணித்துக் கொண்டு அதன்மூலம் நபிப்பைதவிப் பெற்றவர் 'கத்தமுன்னுபுவத்' திற்கு ஒருபோதும் எதிரானவராக மாட்டார். ஏனெனில் கண்ணாடியில் உங்களின் உருவத்தைப்

இவ்வுலகில் இறைவனை காணமுடியும்!


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 21 இல் பி.ஜே இறைவனைக் காண முடியுமா? என்னும் தலைப்பில் இவ்வாறு எழுதியுள்ளார்:

இறைவனை இவ்வுலகில் காண முடியாது என்ற கருத்தை வலியுறுத்தி எழுதியுள்ளார்.

அவனை பார்வைகள் அடைய முடியாது. அவனோ பார்வைகளை அடைகிறான். என்று அல்லாஹ் கூறுகிறான். (திருக்குர்ஆன் 6:103) 

காதியானிப் பிரச்சினை - மௌலான மௌதூதி ஏட்டிற்கு பதில்


அஹ்மதியா ஜமாத்தை முஸ்லிம்களல்லாத சிறுபான்மையினராக ஆக்க வேண்டும் எண்ணத்துடன் 1953 இல் ஜமாத்தே இஸ்லாமி என்ற (மௌதூதி) இயக்கத்தின் தலைவர் அபுல் அஹ்லா மௌதூதி பாகிஸ்தானில் 'காதியானிப் பிரட்ச்சினை' என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டிருந்தார். அதன் காரணமாக பாகிஸ்தானில் அந்நாட்டு அரசிற்கு எதிராக மிகப் பெரிய கிளர்ச்சி ஏற்ப்பட்டது. இந்தக் குழப்பங்களுக்கு காரணமாயிருந்த மௌதூதி சாஹிபை பாகிஸ்தான் அரசாங்கம் சிறையிலடைத்து மரண தண்டனைகூட விதித்தது. பின்னர் அவர் விடுதலையானார்.

இதே தீய நோக்கத்துடன் இந்தப் புத்தகம் 1963 இல் ஆண்டில் இலங்கையில்

முஜாஹிதா முனாபிக்கா?


அவதூறுகளும், குற்றச்சாட்டுகளும் அஹ்மதிகள் மீது கூறப்படுவது புதிதானதன்று.

எனினும் அஹ்மதிய்யா ஜமாஅத்திற்கெதிராக கூறப்படும் நச்சுக் கருத்துக்களை மறுப்பதும் மக்களுக்குத் தப்பெண்ணம் ஏற்பட்டுவிடாது தடுப்பதும் எங்கள் கடமையாகும். 

அலட்டலுக்கும் வெறும் ஆவேசப் பேச்சுகளுக்கும் பேர் போன முன்னால் அரசியல்வாதி ஒருவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்து கொண்டிருக்கும் ஓர் ஏடு நம்மைப் பற்றி புதிதாக ஒரு புரளியை ஏற்படுத்தியுள்ளது. 


இரு வேறு ஈஸா நபிமார்கள்


பக்கம் 53 இல் அபூ அப்தில்லாஹ் எழுதுகிறார்: 

ஈஸா (அலை) அவர்கள், அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு குஷ்டரோகிகளையும், கடும் வியாதியஸ்தர்களையும் சுகப்படுத்தியது, இறந்தவர்களை உயிர்பித்தது. இப்படிப்பட்ட தனிச்சிறப்புகளை உடையவர்களாக ஈஸா (அலை) இருந்தார்கள். 

நம் பதில்: 

ஈஸா நபி (அலை) முதலில் வந்த போது செய்த அற்புதங்களை அபூஅப்தில்லாஹ் கூறியுள்ளார். ஈஸாநபியின் இரண்டாவது வருகையின் போது அவர் சிலுவையை முறிப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா வரியை நீக்குவார்; செல்வங்களை வாரி வாரி வழங்குவார்; நீதியை நிலைநாட்டுவார்

இயேசுவும் முக்கடவுள் கொள்கையும்


முக்கடவுள் கொள்கையில் அதாவது பிதா, குமாரன் பரிசுத்த ஆவி. என்ற மூவர் கூட்டணியில் – நம்பிக்கை வைப்பது கிருஸ்தவ சமயத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் பிதா, குமாரன் பரிசுத்த ஆவி என்ற மூவராகக் கடவுள் இருக்கிறார் என்றும் மூவரும் ஒன்றாக இணைந்து ஒரே கடவுளாக இருக்கிறார் என்றும், இம் மூவரும் ஒன்றாக இணைந்திருந்த போதிலும் இம் மூவரும் தனித்தனியே வல்லமையுடன் செயல்படத் தக்கவராய் இருக்கின்றனர் என்றுமே கிருஸ்தவ சமுதாயம் நம்பிக் கொண்டிருக்கிறது. இத்தகைய நூதனக் கொள்கையில் அவர்கள் நம்பிக்கை வைத்தே ஆகவேண்டும். 


மிஹ்ராஜ் பயணம்


ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வானுலகில் நீண்ட பயணத்தை மேற்கொண்டு அங்கு பலரைச் சந்தித்து முடிவில் இறைவனை நேருக்கு நேராகக் கண்டு பேசி திரும்பினார்கள். இதுவே மிஹ்ராஜ் என பொதுவாகக் கருதப்படுகிறது. இதற்க்கு ஓர் அற்புதத்தை ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தார்கள் என்று திருக்குரானிலிருந்தும், ஹதீஸ்களிலிருந்தும் திட்டவட்டமாகத் தெரியவருமானால் முஸ்லிம்கள் தமது பகுத்தறிவுச் சிந்தனையை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு அதை அப்படியே நம்புவது கடமையாகும்.

ஆனால், மிஹ்ராஜ் என்பது நிகழ்ந்த ஒன்றென்றாலும் அது தற்கால முல்லாக்கள் கூறுவது போன்று நடைபெற்றதா? நபி (ஸல்) அவர்கள்

நஜாத் ஆசிரியரின் கேள்வி.


ஈஸா (அலை) அவர்கள் 120 வயது வரை வாழ்ந்ததாக கூறுகிறீர்கள். அவரது காலத்திலேயே பவுல் என்பவன் கிறிஸ்தவ உலகில் திரியேகத்துவத்தை உண்டாக்கியதாகக் கூறப்படுகிறது. இவற்றைப் பற்றி ஈஸா (அலை) அவர்களுக்குத் தெரியாமல் போனதா? திரியேகத்துவக் கொள்கை ஆரம்பமாகும் போது ஈஸா (அலை) அவர்கள் எங்கிருந்தார்கள்? (அபூ அப்தில்லாஹ் – கிறிஸ்டியானி நகரம் 

நம் பதில்: 

ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் 120 வயது வரை வாழ்ந்ததாக அஹ்மதிகள் கூறவில்லை. ‘நிச்சயமாக ஈசப்னு மர்யம் 120 வது வரை வாழ்ந்தார்கள்’ என்று

ஓரங்களில் குறையும் பூமி என்பது கடல் அரிப்பில்லை


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 243 – இல் ஓரங்களில் குறையும் பூமி என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

நிலப்பரப்பு சிறிது சிறிதாக கடலால் விழுங்கப்பட்டு வருவதை சமீப காலத்தில்
விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

14 நூற்றாண்டுகளுக்கு முன்பு நிலப்பரப்பு, கடலால் அரிக்கப்பட்டு அதன் ஓரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதை யாரும் அறிந்திருக்க முடியாது.