அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

Showing posts with label கனவு. Show all posts
Showing posts with label கனவு. Show all posts

கனவுகள்


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 122 இல் கனவுகள் எனும் தலைப்பிலும், இதர நம்பிக்கைகள் – கனவுகள் எனும் தலைப்பிலும் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

இந்த அத்தியாயத்தில் (12 வது அத்தியாயத்தில்) யூஸுப் நபியின் கனவு, இரண்டு கைதிகளின் கனவு, மன்னரின் கனவு என பல கனவுகளும் அதற்கான விளக்கங்களும் கூறப்பட்டுள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு சிலர் கனவுகளுக்கு விளக்கம் சொல்கிறோம் என்ற பெயரில் பல விதமாக உளறி வருகின்றனர்.