அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

Showing posts with label புரோகிதப் புரட்டு. Show all posts
Showing posts with label புரோகிதப் புரட்டு. Show all posts

அந்நஜாத்தின் புரோகிதப் புரட்டு.


ஷிர்க்கிலும், குப்ரிலும் மூழ்கியிருப்பவர்களைக் கரை சேர்க்கும் திருப்பணியில் ஈடுபட்டிருப்பதால் நமக்குப் பதிலளிக்கப் பக்கங்களை ஒதுக்க இயலாது என்று பழைய பல்லவியைப் பாடி இப்போது ஒரு புதுப் பூச்சாண்டியைக் காட்டியிருக்கிறது அந்நஜாத் ஏடு "தெளிவான திருக்குர்ஆன் ஆயத்துகளைக் கொண்டும், உண்மைக் ஹதீதுகளைக் கொண்டும் நாம் கேட்டிருக்கும் வரிசையிலேயே ஒரு நூல்" தயாராகிறதாம் அது ஏப்ரலில் 15 வெளிவருமாம். அதன் விலை 10? இப்படி சந்தைக்கு வராது சரக்கிற்கு விலை கூறி, விளம்பரம் தந்து வருமானத்திற்கு வழிகோலியிருக்கிறது நஜாத்! பிழைக்கத் தெரிந்தவர்கள்!!


அந்-நஜாத்தும் புரோகிதமே !

மவ்லவி O.M. முஸ்ஸம்மில் அஹ்மத் H.A

ஹஸ்ரத் ஈஸா (அலை) 2000 ஆண்டுகளாக பௌதீக உடலுடன் வானத்தில் உயிருடன் இருக்கிறார்கள். அதே ஈஸா நபியே மீண்டும் இந்த உலகிற்கு இறங்கிவருவார் என்ற புரோகிதக் கொள்கையை திருக்குர்ஆன்,ஹதீஸ்களிலிருந்து நிரூபிக்க முடியுமா? என்று மௌலவிP.M. முஹம்மது அலி H.A அவர்கள் கேட்டிருந்த கேள்விக்கு அந்நஜாத் மே2011 இதழில் கொடுத்த பதிலை திருக்குர்ஆன் ஹதீஸ்களின் ஒளியில் அலசி ஆராய்வது இக் கட்டுரையின் நோக்கம்.


அந்நஜாத்தின் புரோகிதப் புரட்டு.


இறை தூதர்களில் ஒருவரான ஹஸ்ரத் ஈசா நபி (அலை) அவர்களை அந்-நஜாத் ஆசிரியர் அபூ அப்தில்லாஹ் ஓய்வு பெற்ற ஒரு மாவட்ட ஆட்சியருக்கு ஒப்பிட்டு (நஜாத் மே 2011 பக்கம் 30) எழுதிய அவலத்தை கண்டித்து அப்துல் ஹமீது காதிர் என்பவர் எழுதிய விமர்சனத்தை அந்நஜாத் ஆகஸ்டு 2011 பக்கம் 20 இல் படித்திருப்பீர்கள். 

வழிகேடர்களின் கொள்கை என திருக்குர்ஆன் வருணித்துக் கூறும் இறுதி நபிக் கொள்கையை நிரூபித்துக் காட்ட திராணியற்ற நிலையில், அந்தப் புரோகிதக் கொள்கையை (40:35) நியாயப்படுத்துவதற்காக, வருகின்ற ஈஸா