அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

தொழுகையில் இன்பம்

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் மஹ்தி அவர்கள் கூறுகின்றார்கள்:

தொழுகை என்பது, சிறப்பான ஒரு பிரார்த்தனை ஆகும். ஆனால், மக்கள் இதனை ஒரு பாரமாகக் கருதுகின்றனர்.
எந்தத் தேவையும் இல்லாத இறைவனுக்கு, மனிதன் இறைவனை வணங்க வேண்டும், திக்ரு செய்ய வேண்டும் என்பது தேவையில்லாததுதான். ஆயினும் தொழுகை, திக்ரு முதலியவற்றில் உள்ள பயன்கள் மனிதனுக்கே கிடைக்கின்றன. இவற்றின் மூலம் மனிதன் தான்

இயேசுவும் பொந்தியு பிலாத்துவும்

 
இயேசுவை யூத சமயத் தலைவர்கள் கொல்லத் திட்டமிட்டிருந்த விவரத்தை சுவிசேகர் மத்தேயு இவ்வாறு எழுதியுள்ளார்: “....... சகல பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் இயேசுவைக் கொலை செய்யும்படி அவருக்கு விரோதமாக ஆலோசனை பண்ணி (27:1)

ஆனால் தனது அடியாராகிய இயேசுவை சிலுவை மரணத்திலிருந்தும், கொடியவர்களின் கையிலிருந்தும் காப்பாற்றும் திட்டத்தினை திருக்குர்ஆன் கீழ்க்கண்டவாறு எடுத்துரைக்கிறது.

‘(ஈஸாவின் பகைவர்களாகிய) அவர்களும் திட்டம் தீட்டினர். அல்லாஹ்வும்

இக்திதார்

 
அல்லாஹ்வுடைய வல்லமைமிக்க அடையாளம் என்பதன் பொருள், அவனுடைய பொதுவான விதிகளுக்கும், சட்டத்திற்கும், மாறுபட்ட நிகழ்ச்சியாகும். இதற்க்கு இக்திதார் என்று பெயர். ‘இக்திதார்’ மூலமாக நிகழும் அடையாளம், விரோதிகளை அழிப்பதற்கு மட்டுமின்றி, இறைநேசர்களுக்கும், அவனுடைய நல்லடியார்களுக்கும் உதவிபுரிவதற்க்காகவும் காட்டப்படுகிறது. சில சமயம் ஒரே வேளையில் இரு வகையான அடையாளங்களை ஒன்றாக சேர்த்துக் காட்டுகின்றான்.

ஹஸ்ரத் மஸீஹ் மஊது (அலை) அவர்கள் கூறுகிறார்கள். ‘நான் ஸியால் கோட்டில் இருக்கும் போது ஒரு நாள் கடுமையான இடியும் மின்னலும்

காலத்தால் மாறாதது இஸ்லாம்!


முஸ்லிம் சட்டத்தை மாற்றவேண்டும் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஒரே விதமான சட்டம் இருக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் அவ்வப்போது எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்த நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவனுடைய மதத்தைக் கடைபிடிக்க அதன் படி வழிபாடுகள் நிகழ்த்த, அதனை பிரச்சாரம் செய்ய இந்திய அரசியல் சாசனம் உரிமை வழங்கி இருக்கிறது.

இதற்க்கு மாற்றமாக ஒருவன் தன் மதம் கூறும் வழிமுறைகளை கடைபிடிக்கக் கூடாது, பொதுவானதையே கடைபிடிக்க வேண்டும் என்று கூறுவது அரசியல் சாசனம் அளித்துள்ள தனி மனித உரிமைகளை

லா நபிய்ய பஹ்தி ஹதீஸிற்கு இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கம்

 
லா நபிய்ய பஹ்தி என்ற ஹதீஸிற்கு இனி இறுதிநாள் வரை எந்த ஒரு நபியும் தோன்றமாட்டார்கள் என்பதுதான் இன்றைய இஸ்லாமிய அறிஞர்கள்(?) கொடுக்கும் விளக்கமாகும். ஆனால் இவர்களின் இந்த கூற்றுகளை கடந்த கால இஸ்லாமிய அறிஞர்கள் மறுக்கிறார்கள்.

ஷைஹுல் இமாம் இப்னு கத்தீபா (ஹிஜ்ரி 267)

ஹஸ்ரத் ஆயிஸா (ரலி) அவர்களின் கூற்று ‘லா நபிய்ய பஹ்தி’ என்ற நபி மொழிக்கு முரண்பட்டதல்ல; ஏனென்றால் தமக்குப் பிறகு தாம் கொண்டு வந்த ஷரியத்தை இரத்து செய்யக் கூடிய ஒரு நபியும் தோன்றமாட்டார்கள்.

யூதர்களின் கைக் கூலிகள் யார்!

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தபோது மேற்கத்திய சக்திகள் தங்களின் சுய நலனுக்காக முஸ்லிம் நாடுகளோடு பல ஒப்பந்தங்களை செய்து கொண்டன முஸ்லிம் நாடுகளுக்குப் பல பொய்யான வாக்குறுதிகளை அளித்து அந்நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரே சக்தியாக மாறவிடாது தடுத்திருந்தார்கள். இதனால் முஸ்லிம் நாடுகள் ஒன்றை ஒன்று போட்டி மனப்பான்மையோடு எதிர்த்துக் கொண்டிருந்ததன்.

அதே சமயத்தில் இந்த மேற்கத்திய வல்லரசுகள் யூதர்களோடு கலந்துரையாடி அவர்களோடு பல ஒப்பந்தங்களையும் செய்தனர். அரபு நாடுகளோடும்

வீடுகளில் ஒழுக்கத்தையும், அமைதியையும் ஏற்படுத்துங்கள்.

.
பொய் எல்லாத் தீமைகளுக்கும் குழப்பங்களுக்கும் அச்சாணியாகவும் எல்லாப் பாவச் செயல்களின் வித்தாகவும் இருக்கின்றது.


நன்மையில் துவக்கப்படுவது நன்மையில் முடிவதைப் போல் தீயதில் துவக்கப்படுவது தீமையில்தான் முடிவடையும்.

இன்னாமஅல் அஹ்மாலு பின் நியாத் – எண்ணத்தின் அடிப்படையிலேயே செயல்கள் அமையப்பெறும் என்ற நபி மொழியின் கருத்தும் இதுவேயாகும்.

உங்கள் வாழ்க்கைப் பயணத்தின் நோக்கமும் துவக்கமும் எப்படி இருக்குமோ அதற்கேற்றவாறே அதன் முடிவும் அமையும்.


ஆலிம்களைக் கவர்ந்த காதியானி (அபூதாரிக்)


மௌலான உபைதுல்லாஹ் ஸிந்தி அவர்கள் உலகப் புகழ்பெற்ற இந்திய அறிஞர். இவர் அரபு நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்றிருக்கிறார்கள். அந்நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்கள் இவரை ஒரு பேரறிஞராக ஏற்று கௌரவித்துள்ளன. இவர் டில்லியிலுள்ள ஜாமியா மில்லியா நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். இவரைப் பற்றி இவருடைய மாணவர் மௌலான முஹம்மது ஸர்வார் என்பவர் உருது மொழியில் இஹ்பாதாத்தோ மல்பூஸாத் ஹஸ்ரத் மௌலான உபைதுல்லாஹ் ஸிந்தி என்ற நூலை எழுதியுள்ளார். அந்நூலில் காணப்படும் குறிப்பு

ஈசா நபி (அலை) அவர்களின் மரணம் - P.J யின் அறியாமை

திருக்குர்ஆன் விளக்கம் - ஈஸா (அலை) வருகை என்னும் தலைப்பில் பி. ஜைனுலாப்தீன், (ஒற்றுமை இதழில் 45 ஆம் பக்கத்தில் எழுதப்பட்ட திருக்குரானின் தவறான விளக்கத்திற்கு இங்கு விளக்கம் தரப்படுகிறது.

மௌலவி பி.ஜைனுலாப்தீன்: "மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயையும் இரண்டு கடவுளர்களாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று நீர்தான் மக்களுக்கு கூறினீரா? என்று அல்லாஹ் கூறும்போது, நீ தூயவன். எனக்கு உரிமை இல்லாததை நான் கூறுவது எனக்குத் தகாது. நான் அவ்வாறு கூறியிருந்தால் நிச்சயமாக நீ அறிவாய். என் மனதில் உள்ளதை நீ அறிவாய். உன் மனதில் உள்ளதை நான் அறியமாட்டேன் நீயே மறைவானவற்றை எல்லாம் நன்கு அறிபவன்! எனது இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள் என நீ எனக்கு

ஆதம் நபி வாழ்ந்தது இவ்வுலக தோட்டமா? மறுமை சொர்க்கமா?


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 12 இல் சொர்க்கம் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

ஆதம் நபி மறுமையில் நல்லோர்க்கு இறைவன் வழங்கவுள்ள சொர்க்கச் சோலையில் தங்க வைக்கப்பட்டு இறைக் கட்டளையை மீறியதால் வெளியேற்றப்பட்டார் என்று பலர் கூறுகின்றன.

நம் விளக்கம்:

திருக்குர்ஆன் 2:36 இல் ஆதமே! நீரும் உம் மனைவியும் இத்தோட்டத்தில் குடியிருங்கள்.... என்று கூறினோம் என்று வருகிறது. இதே கருத்து 7:20 வசனத்திலும் வருகிறது. பூமியிலுள்ள எல்லா குடியிருக்கும் இடங்களும் அதாவது வாழும் இடங்களும்...... இதில் வாழும் இடங்கள் என்று எந்த அடைமொழியும் இன்றியே திருக்குர்ஆனில் வருகிறது. ஆனால் சொர்க்கத்தில் உள்ள குடியிருக்கும் இடத்தை – வாழும் இடத்தைப் பற்றி அல்லாஹ் கூறும் போது, தூய, பரிசுத்தமான வாழுமிடம் என்று தூய என்று அடைமொழியுடன் சேர்த்துக் கூறுகிறான். திருக்குர்ஆனில் 9:72; 61:13 ஆகிய வசனங்களில்,

அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் கொள்கையினை குறித்து சிராஜ் அப்துல்லாஹ்வின் அறியாமை


இக்காலத்தில் எல்லா இஸ்லாமிய பிரிவுகளும் பிற இஸ்லாமிய பிரிவுகளை குறைக் கூறிக் கொண்டு அவர்கள் இஸ்லாத்திற்கு முரணாக செயல்படுகிறார்கள், எனவே நாங்களே சரியான பிரிவு என்று ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு பிரிவை ஏற்படுத்திக் கொண்டனர். ஆனால் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் ஏனைய இஸ்லாமிய பிரிவுகளை போல் சுயமாக ஒரு பிரிவை ஏற்ப்படுத்தவில்லை. அல்லாஹ்தான் இக்கால மக்களை சரி செய்வதற்காக தன் புறமிருந்து ஒருவரை அனுப்பியுள்ளான். அவர் அல்லாஹ் மற்றும் ரசூலால் முன்னறிவிக்கப்பட்ட இமாம் மஹ்தியும் மஸீஹும் ஆவார். அவரை பின்பற்றுவதன் மூலமே குழப்பங்களுக்கு தெளிவும் வழிகேட்டிலிருந்து நேர் வழியும் கிடைக்கும்.எனவே இறைவனால் ஏற்ப்படுத்தப்பட்ட அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தே இக்காலத்தில் உண்மையானதாகும்.கடந்த காலத்தில் மக்கள் வழி தவறிய போது அல்லாஹ்

மிஹ்ராஜ் பயணம் ஆத்மீக காட்சியே – அந் நஜாத்திற்கு பதில்


அபூ அப்தில்லாஹ் தன் நூல் பக்கம் 47, 48, இல் இவ்வாறு எழுதியுள்ளார். 

காதியானிகள், ஈஸா(அலை) அவர்கள் அல்லாஹ் அளவில் உயர்த்தப்பட்துள்ளதை மறுத்து வருவதை நிலைநாட்ட நபி (ஸல்) அவர்களின் (மிஹ்ராஜ்) விண்வெளிப் பயணத்தையும், ஆதம் (அலை) அவர்கள் சுவர்கத்திலிருந்து பூமிக்கு பூத உடலுடன் இறங்கியதையும் மறுத்து வருகிறார்கள். இதற்க்குக் காரணம் இந்த இரண்டு நிகழ்சிகளையும் உண்மை என்று ஒப்புக் கொண்டால் அதே அடிப்படையில் ஈஸா (அலை) அவர்கள் உடலுடன் அல்லாஹ் அளவில் உயர்த்தப்பட்டதையும் ஒப்புக் கொள்ள வேண்டி வரும் என்ற தப்பான எண்ணமேயாகும். எனவே நபி (ஸல்) அவர்கள் மிஹ்ராஜுக்கு சென்றது கனவில் கனவில் இடம் பெற்ற நிகழ்ச்சியே என்று அவர்கள் சாதித்து வருகிறார்கள். ஆனால் குர்ஆனில் இஸ்ரா என்ற

நஜாத் மற்றும் p.j. பிரிவினர் முஷ்ரிக்குகள் இல்லையா? - 2


அடுத்து ஈஸா நபி (அலை) 2000 ஆண்டுகளாக உயிருடன் இருக்கிறார் என்ற ஷிர்க்கான கொள்கையை நிலைநாட்ட அபூ அப்தில்லாஹ் சாஹிப் எடுத்து வைத்துள்ள சான்றுகள் வேடிக்கையானவை. இதுவே இவர்களின் வாடிக்கையும், கோவை விவாதத்தில் பி.ஜே சாஹிபும் இதையேதான் எடுத்துவைத்தார்.

அன்று உயிரோடு இருந்த நபி(ஸல்) அவர்கள் இனிமேல் இறந்து போகக் கூடிய ஒரு தூதரே என 3:144 இல் கூறியிருப்பதைப் போலவே ஈஸா நபியும் இனிமேல் இறந்துபோகக் கூடியவர் என 5:76 இல் அல்லாஹ் கூறியிருக்கிறான் என்று அபூ அப்தில்லாஹ் சாஹிப் எழுதியிருக்கிறார்.

அப்படி என்றால் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களின் மரணத்தை ஏற்க மறுத்த

நஜாத் மற்றும் p.j. பிரிவினர் முஷ்ரிக்குகள் இல்லையா?


அந்நஜாத் அக்டோபர் 2010 இதழில் அதன் ஆசிரியர் அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தைப் பற்றி, 'அவர்கள் செல்வது நேர்வழி அல்ல; கோணல் வழிகளில் ஒன்றே என்பது குரான், ஹதீஸை எவ்வித சுய விளக்கமும் இல்லாமல் உள்ளது உள்ளபடி விளங்குகின்றவர்கள் அறிய முடியும்' எனக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அதற்க்கு அவர் எடுத்து வைத்திருக்கும் சான்று, மார்க்கம் முழுமையடைந்துவிட்டது; அதில் புதிதாக சேர்க்க ஒன்றுமே இல்லை. (5:3) அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் 1431 ஆண்டுகளுக்கு முன்னரே முழுமைப் படுத்தப் பட்ட அந்த மார்க்கம் மட்டுமே (3:19) ஆகியையாகும்.

எல்லா நபிமார்களை விட எல்லா வகையிலும் சிறந்தவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே!


அபூ அப்தில்லாஹ் பக்கம் 28 இல், தூதர்களில் சிலரை சிலரைவிட மேன்மையாக்கி இருக்கிறோம்... என்று தான் அல்லாஹ் நவின்றுள்ளானே அல்லாமல் நபி (ஸல்) அவர்களை மற்ற எல்லா நபிமார்களையும் விட எல்லா விசயங்களிலும் உயத்த்தி இருப்பதாகச் சொல்லவில்லை என்று எழுதி, ஈஸா (அலை) தகப்பனின்றி பிறந்தது, வானிற்கு உயர்த்தப்பட்டது போன்றவை நபி (ஸல்) அவர்களுக்கு இல்லை என்றும் எழுதியுள்ளார். 

நம் பதில்: 

இவர்கள் இஸ்லாமிய வட்டத்திற்குள் தான் உள்ளாரா? என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்துகிறது. 

இஸ்லாத்தின் அடிப்படைக்கே குழிப்பறிக்கும் இத்தகைய

இஞ்சீலும் சபூரும் வேதங்களா?


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 4-இல் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

தவ்ராத், ஸபூர், இஞ்சீல், திருக்குர்ஆன் இந்த நான்கு வேதங்களின் பெயர்கள்தான் குர்ஆனில் கூறப்பட்டுள்ளன. 

நம் பதில்:

ஸபூரும் இஞ்சீலும் வேதங்கள் என திருக்குர்ஆன் கூறுகிறதா? திருக்குர்ஆன் இக் கருத்தை மறுக்கிறது. 73:15; 46:13; 46:30; 45:16-18; 6:92; 28:48-49; 61:7 ஆகிய வசனங்கள் அக்கருத்தை மறுப்பதை கீழே காண்போம்.

46:13 இதற்க்கு முன்னர் மூஸாவின் வேதம் வழிகாட்டியாகவும் கருணையாகவும் விளங்கியது. (குர்ஆனாகிய) இது அநீதியிளைப்பவர்களை

ஈஸா நபி இறந்துவிட்டார் - பி.ஜே யின் இணைவைப்பு


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 278 இல் தாயாருக்கு நன்மை செய்யும் காலமெல்லாம் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:
திருக்குர்ஆன் 19:30-32 வசனங்களுக்கு எல்லா தமிழ் மொழிபெயர்ப்புகளும், எல்லா ஆங்கில மொழிபெயர்ப்புகளும் தவறான பொருள் தந்துள்ளன. எனவே 29:32 வசனத்தின் பொருள் என்னவென்று பார்ப்போம் என்று எழுதியுள்ளார்.

பிறருடைய மொழிபெயர்ப்பு:

ஈஸா கூறினார்: நான் அல்லாஹ்வின் அடியான். அவன் எனக்கு வேதத்தை வழங்கி, என்னை நபியாக ஆக்கியுள்ளான். நான் எங்கிருந்தாலும் அவன் என்னை அருள் நிறைந்த (ஒரு)வனாக ஆக்கியுள்ளான். நான் உயிருடன் இருக்கும் வரை தொழுகையையும், ஸக்காத்தையும் அவன் எனக்கு கட்டாயக் கடமையாக்கியுள்ளான்.

வழி கெட்ட கொள்கை (இறுதி நபி ) இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாக மாறிய அவலம்.


இறுதி நபிக் கொள்கை இன்று அல்ல, பழங்காலந்தொட்டே மக்களிடம் ஒரு நோயாக இருந்து வந்திருக்கிறது. இறைவன் இதனை வழிகேடு என்றும் எச்சரித்திருக்கின்றான். அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்:

"இதற்க்கு முன்னர் யூசுப் தெளிவான சான்றுகளுடன் உங்களிடம் வந்தார். ஆனால் அவர் உங்களிடம் கொண்டு வந்தது குறித்து நீங்கள் சந்தேகத்தில் இருந்தீர்கள். அவர் மரணமடைந்தபோது, அவருக்குப் பின்னர் எந்தத் தூதரையும் அல்லாஹ் ஒருபோதும் அனுப்பமாட்டான் என்று நீங்கள் கூறினீர்கள். இவ்வாறே அல்லாஹ் வரம்புமீறுபவர்களையும், (இறை அடையாளங்களில்) சந்தேகம் கொள்பவர்களையும் வழிகேடர்கள் என்று

அபூ அப்தில்லாஹ்வின் அறிவீனம்


அபூ அப்தில்லாஹ் தன் நூல் பக்கம் 37 இல் “ஒரு மனிதனின் உயிர் உறக்கத்தின் நிலையில் கைப்பற்றபட்டாலும் அவனை சுற்றி நடைபெருபவைகளை அவன் அறியமாட்டான். இந்நிலையில் அவன் அவைகளின் நிமித்தம் குற்றம் சாட்டப்படவும் மாட்டான். இந்த அடிப்படையிலேயே ஈஸா (அலை) அவர்கள் 5:117 வசனத்தில் என்னைக் கைப்பற்றிய பின், உலகில் இல்லாத காலத்தில் அவர்கள் செய்தவைகளை நான் அறியேன், நீயே நன்கறிந்தவனாக இருக்கிறாய் என்று கூறுகிறார்கள். எனவே 5:117 வசனத்தை ஆதாரமாக காட்டி ஈஸா (அலை) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று காதியானிகள் கூறுவது அறிவீனமாகும்” என்று எழுதியுள்ளார். 

இந்த உம்மத்தில் ஈசா நபியின் வருகை நிகழ்ந்து விட்டது!


O.M முஸம்மில் அஹ்மது 

“ஈஸா நபியின் வருகை” எனும் தலைப்பில் மௌலவி P. ஜைனுல் ஆப்தீன் எழுதிய ஒரு கட்டுரை ஏகத்துவம் மார்ச் 2012 இதழில் வெளிவந்துள்ளது. அதில் “தஜ்ஜாலின் கொடுமை தலைவிரித்தாடும் போது ஈஸா நபியவர்கள் வானிலிருந்து இவ்வுலகிற்கு இறங்கி வருவார் என்பது பத்து அடையாளங்களில் ஒன்றாகும் என எழுதியுள்ளார். ஆனால் அதற்கு எவ்விதச் சான்றையும் அவர் எடுத்து வைக்கவில்லை. 

இதை விட வேடிக்கையானது என்னவெனில். 1994-ஆம் ஆண்டு கோவையில் P.J யுடன் விவாதம் நடத்தியபோது பிற முஸ்லிம்களைப் போன்றே அப்போது